தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு ...  நாட்டின் காபி ஏற்றுமதி, 7.36 சதவீதம் சரிவு நாட்டின் காபி ஏற்றுமதி, 7.36 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூ.80,000 கோடி வாராக்கடன் மீட்பு : மார்ச்சுக்குள் மேலும் ரூ.70,000 கோடிக்கு வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2019
23:55

புதுடில்லி:‘‘இதுவரை, என்.சி.எல்.டி., எனப்படும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


அவர், முகநுாலில், ‘நொடிந்த நிறுவனங்கள் மற்றும் திவால் சட்டத்தின் இரண்டு ஆண்டுகள்’ என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது:முந்தைய, காங்., ஆட்சியில் அறிமுகமான, காலத்திற்கு உதவாத, அரதப் பழசான வணிக சட்டங்கள், தோல்வியைத் தான் தழுவின.நலிவடைந்த நிறுவனங்களின் புனரமைப்பிற்கு, 1980ல், ‘சிகா’ சட்டத்தை, காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இது, படுதோல்வி அடைந்தது.


கடன் மீட்பு தீர்ப்பாயம்


நலிவடைந்த பல நிறுவனங்கள், கடனை திரும்பத் தராமல், இந்த சட்டத்தை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டன.அடுத்து, வங்கிகள், அனைத்து வாராக் கடன்களையும் வசூலிக்க உதவும் நோக்கில், கடன் மீட்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.இந்த தீர்ப்பாயம், வாராக்கடனை வசூலிப்பதில் சிறப்பாக செயல்பட்டது குறித்து எந்த நிரூபணமும் இல்லை.


இதையடுத்து, நிறுவனம் சாராத திவால் நடவடிக்கைக்கு, பி.ஐ.ஏ., சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இதுவும், துருப்பிடித்த சட்டமாக பயன்படுத்தப்படாமல் வழக்கொழிந்தது.இது போன்ற திறனற்ற சட்டங்களை இயற்றிய, காங்., ஆட்சியில், 2008 –- 14 வரை, வங்கிகள் பாரபட்சமின்றி தாராளமாக கடன்களை வாரி வழங்கின.


இதன் காரணமாகவே, வாராக்கடன் அதிகரித்ததாக, ரிசர்வ் வங்கியின் சொத்து மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.திவால் சட்டம்ஆனால், பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும், வாராக்கடனை வசூலிக்க, வலுவான திவால் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த, 2016, மே மாதம், பார்லி.,யின் இரு சபைகளிலும், இந்த சட்டம் நிறைவேறியது.


நான் கண்ட வரையில், பார்லி.,யில் மிக விரைவாக நிறைவேற்றப்பட்ட சட்டம் இது எனக் கூறலாம்.இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு இறுதியில், திவால் நடவடிக்கைகளை விசாரிக்க, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.இதுவரை, இந்த தீர்ப்பாயத்தில், நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை கோரி, 1,322 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், 260 வழக்குகளில், நிறுவனங்களின் சொத்துக்களை விற்று, கடனை செலுத்த தீர்ப்பாகியுள்ளது.


இதில், 66 வழக்குகள் மூலம், கடன் கொடுத்தோருக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது. என்.சி.எல்.டி., விசாரணைக்கு முன், 4,452 வழக்குகளில், சமரச உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதில், 2.02 லட்சம் கோடி ரூபாய் திரும்ப கிடைத்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.


பூஷன் பவர் அண்டு ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா நிறுவனங்களின் வழக்குகள், இறுதிக் கட்டத்தில் உள்ளன. மார்ச்சுக்குள் இந்த வழக்குகள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கடன் கொடுத்த வங்கிகளுக்கு, மேலும், 70 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


பா.ஜ., அரசின் அதிரடி நடவடிக்கைகளால், நிறுவனங்களை திவால் நிலைக்கு தள்ளியவர்கள், நிர்வாகத்தில் இருந்து வெளியேறி விட்டனர். புதிதாக தேர்வு செய்யப்படும் நிர்வாகக் குழு, நேர்மையாக, வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. இதில், அரசியல் அல்லது அரசு தலையீடு எதுவும் கிடையாது.

அருண் ஜெட்லி,மத்திய நிதியமைச்சர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)