பதிவு செய்த நாள்
03 ஜன2019
23:58
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களின் கீழ், அதிக சொத்துக்களை நிர்வகிப்பதில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு, மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த, 2011 அக்., – 2016 மார்ச் வரை, மியூச்சுவல் பண்டு திட்டங்களின் கீழ், மிக அதிகமான சொத்துக்களை நிர்வகிப்பதில், எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு, முதலிடத்தில் இருந்து வந்தது.அதன் பின், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு, தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில், 2018 டிச., நிலவரப்படி, அதிக சொத்துக்களை நிர்வகிப்பதில், எச்.டி.எப்.சி.எம்.எப்., 3.35 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென் ஷியல், 3.08 லட்சம் கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான காலாண்டில், எச்.டி.எப்.சி.எம்.எப்., நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியலின் சொத்து மதிப்பு, 0.6 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|