பதிவு செய்த நாள்
04 ஜன2019
00:06
புதுடில்லி:பேங்க் ஆப் பரோடா உடனான இணைப்பு நடவடிக்கையால், தேனா, விஜயா வங்கிகளின் பங்கு விலை, சரிவடைந்துள்ளது.
பி.ஓ.பி., எனப்படும் பேங்க் ஆப் பரோடா உடன், தேனா, விஜயா வங்கிகளை இணைக்க, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, விஜயா, தேனா வங்கிகளின் தலா, 1,000 பங்குகளுக்கு, முறையே, பேங்க் ஆப் பரோடாவின், 402 பங்குகள் மற்றும் 110 பங்குகள் கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், விஜயா, தேனா வங்கி பங்குகளின் சந்தை விலை அடிப்படையில், அவற்றின் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.
உதாரணமாக, விஜயா வங்கியின், 51,050 ரூபாய் மதிப்புள்ள, 1,000 பங்குகளுக்கு, பி.ஓ.பி.,யின், 47,939 ரூபாய் மதிப்புள்ள பங்குகள் தான் கிடைக்கும்.அதுபோல, தேனா வங்கியின், 17,900 ரூபாய் மதிப்புள்ள, 1,000 பங்குகளுக்கு, பி.ஓ.பி.,யின், 13,118 ரூபாய் மதிப்புள்ள பங்குகளைத் தான் பெற முடியும். இந்த கணக்கீடு காரணமாக, நேற்று, மும்பை பங்குச் சந்தையில், தேனா வங்கி பங்கின் விலை, 19.78 சதவீதம் குறைந்து, 14.40 ரூபாயில் நிலை கொண்டது.விஜயா வங்கி பங்கின் விலை, 6.76 சதவீதம் குறைந்து, 47.60 ரூபாயில் நிலை பெற்றது.பி.ஓ.பி., பங்கின் விலை, மாற்றமின்றி, 119.40 ரூபாயாக இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|