பதிவு செய்த நாள்
04 ஜன2019
23:14
புதுடில்லி:மூன்று நாட்களாக, தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று சரிவை சந்தித்தது. அதேசமயம், 1 கிலோ வெள்ளி விலை, 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது.
இது குறித்து, தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையாளர்கள் கூறியதாவது:டில்லியில், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 145 ரூபாய் குறைந்து, 32 ஆயிரத்து, 690 ரூபாயாக சரிவடைந்தது. அதே சமயம், 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை, 25 ஆயிரத்து, 200 ரூபாய் என, மாற்றமின்றி இருந்தது.ஒரு கிலோ வெள்ளி விலை, 440 ரூபாய் உயர்ந்து, 40 ஆயிரத்து, 140ரூபாயாக அதிகரித்தது.
அதேசமயம், 100 வெள்ளி நாணயங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை, முறையே, 76 ஆயிரம் ரூபாய் மற்றும் 77 ஆயிரம் ரூபாயாக மாற்றமின்றி இருந்தது.ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, தங்க நகை வியாபாரிகளின் கொள்முதல் குறைவு போன்றவற்றால், அதன் விலை சரிவடைந்து உள்ளது.தொழிற்சாலைகள் மற்றும் நாணயம் தயாரிப்போரின் தேவை அதிகரித்ததால், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|