தங்கம் விலை சரிவு வெள்ளி உயர்ந்தது தங்கம் விலை சரிவு வெள்ளி உயர்ந்தது ...  சர்க்கரை உற்பத்தி  7 சதவீதம் அதிகரிப்பு சர்க்கரை உற்பத்தி 7 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஜவுளி
'இனிமேல் விசைத்தறி தொழிலை கூலி வேலையாக செய்ய வேண்டாம்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
23:21

ஈரோடு:ஈரோட்டில், இந்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், மூன்று நாள், விசைத்தறி ஜவுளி கண்காட்சி மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்பு துவங்கியது.


சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்ற, கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக துணை இயக்குனர், பாலசுப்பிரமணியன் பேசியதாவது:விசைத்தறி தொழிலை, பிறரிடம் ஆர்டர் பெற்று, கூலி வேலையாக செய்ய வேண்டாம்.


இடைத்தரகர்கள் இன்றி, விசைத்தறி உற்பத்தியுடன், அதில் இருந்து பெறப்படும் காடா துணியை, மதிப்பு கூட்டத்தக்க பொருளாக மாற்ற வேண்டும்.இதற்காக, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், திருப்பூர் மாவட்டம்ஆத்துப்பாளையம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இக்கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இணைத்து, மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளியை உற்பத்தி செய்ய தேவையான கடனுதவி, தொழில் நுட்ப உதவிகளை வழங்க உள்ளோம்.


விசைத்தறியாளர்களே சுயமாக நுால் வாங்கி, காடா துணி தயாரித்து, பிளீச்சிங், டையிங் செய்து, ஆடையாக்கி, தாங்களே விலையை நிர்ணயித்து, விற்பனை செய்யும் அளவுக்கு உயர்த்த உள்ளோம்.விசைத்தறியாளர்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளியை உற்பத்தி செய்யும்போது, 'கவர்மென்ட் இ - மார்க்கெட்டிங்' எனப்படும், 'GeM' போர்ட்டலில் பதிவு செய்தால், அரசு துறைகளான ரயில்வே, போக்குவரத்து என பல துறைகளில், மொத்தமாக ஜவுளி சார்ந்த ஆர்டர்களை பெற்று, தொடர் சந்தை வாய்ப்பை பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.இக்கண்காட்சி, நாளை வரை, ஈரோடு, மல்லிகை அரங்கில், தினமும் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கும்.


நுால் வங்கிகள்



பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 36 ஆயிரம் தறி மேம்பாட்டு பணிக்காக, 46.23 கோடி ரூபாயும்; மாநில அளவில், ஒரு லட்சம் தறி மேம்பாட்டு பணிக்கு, 161 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. ஈரோட்டில், 3.50 கோடி மானியத்தில், நான்கு நுால் வங்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)