பதிவு செய்த நாள்
04 ஜன2019
23:21
ஈரோடு:ஈரோட்டில், இந்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், மூன்று நாள், விசைத்தறி ஜவுளி கண்காட்சி மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்பு துவங்கியது.
சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்ற, கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக துணை இயக்குனர், பாலசுப்பிரமணியன் பேசியதாவது:விசைத்தறி தொழிலை, பிறரிடம் ஆர்டர் பெற்று, கூலி வேலையாக செய்ய வேண்டாம்.
இடைத்தரகர்கள் இன்றி, விசைத்தறி உற்பத்தியுடன், அதில் இருந்து பெறப்படும் காடா துணியை, மதிப்பு கூட்டத்தக்க பொருளாக மாற்ற வேண்டும்.இதற்காக, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், திருப்பூர் மாவட்டம்ஆத்துப்பாளையம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இக்கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இணைத்து, மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளியை உற்பத்தி செய்ய தேவையான கடனுதவி, தொழில் நுட்ப உதவிகளை வழங்க உள்ளோம்.
விசைத்தறியாளர்களே சுயமாக நுால் வாங்கி, காடா துணி தயாரித்து, பிளீச்சிங், டையிங் செய்து, ஆடையாக்கி, தாங்களே விலையை நிர்ணயித்து, விற்பனை செய்யும் அளவுக்கு உயர்த்த உள்ளோம்.விசைத்தறியாளர்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளியை உற்பத்தி செய்யும்போது, 'கவர்மென்ட் இ - மார்க்கெட்டிங்' எனப்படும், 'GeM' போர்ட்டலில் பதிவு செய்தால், அரசு துறைகளான ரயில்வே, போக்குவரத்து என பல துறைகளில், மொத்தமாக ஜவுளி சார்ந்த ஆர்டர்களை பெற்று, தொடர் சந்தை வாய்ப்பை பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.இக்கண்காட்சி, நாளை வரை, ஈரோடு, மல்லிகை அரங்கில், தினமும் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கும்.
நுால் வங்கிகள்
பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 36 ஆயிரம் தறி மேம்பாட்டு பணிக்காக, 46.23 கோடி ரூபாயும்; மாநில அளவில், ஒரு லட்சம் தறி மேம்பாட்டு பணிக்கு, 161 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. ஈரோட்டில், 3.50 கோடி மானியத்தில், நான்கு நுால் வங்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|