பதிவு செய்த நாள்
04 ஜன2019
23:24
புதுடில்லி:கடந்த ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், சர்க்கரை சந்தை பருவம், அக்டோபர் மாதம் துவங்குகிறது. நடப்பு, 2018 – -19ம் ஆண்டின் முதல் காலாண்டான, அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, செயல்பாட்டில் உள்ள, 501 சர்க்கரை ஆலைகள் மூலமாக, மொத்தம், 110.52 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2017ம் ஆண்டில், மொத்தம், 505 ஆலைகள் மூலமாக, 103.56 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த, 7 சதவீதம் அதிகரிப்புக்கு, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆலைகள், அரவையை முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது தான் காரணம்.
இருப்பினும், இம்முறை குறைவான மழை பொழிவு உள்ளிட்ட சில காரணங்களால், மஹாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி, கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கிறது. எனவே, மொத்தத்தில் சர்க்கரை உற்பத்தி அளவு குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன், இக்கூட்டமைப்பு, நாட்டின் சர்க்கரை உற்பத்தி குறைந்து, 2018 –- 19ம் ஆண்டில், 315 லட்சம் டன் ஆக இருக்கும் என, கணித்திருந்தது.கடந்த, 2017 – -18ம் ஆண்டில், 325 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|