தங்கம் விலை சரிவு வெள்ளி உயர்ந்தது தங்கம் விலை சரிவு வெள்ளி உயர்ந்தது ...  சேவைகள் துறை வளர்ச்சியில் மந்த நிலை:‘நிக்கி – மார்கிட்’ ஆய்வறிக்கை வெளியீடு சேவைகள் துறை வளர்ச்சியில் மந்த நிலை:‘நிக்கி – மார்கிட்’ ஆய்வறிக்கை ... ...
சர்க்கரை உற்பத்தி 7 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
23:24

புதுடில்லி:கடந்த ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.


இது குறித்து, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், சர்க்கரை சந்தை பருவம், அக்டோபர் மாதம் துவங்குகிறது. நடப்பு, 2018 – -19ம் ஆண்டின் முதல் காலாண்டான, அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.


டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, செயல்பாட்டில் உள்ள, 501 சர்க்கரை ஆலைகள் மூலமாக, மொத்தம், 110.52 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2017ம் ஆண்டில், மொத்தம், 505 ஆலைகள் மூலமாக, 103.56 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த, 7 சதவீதம் அதிகரிப்புக்கு, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆலைகள், அரவையை முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது தான் காரணம்.


இருப்பினும், இம்முறை குறைவான மழை பொழிவு உள்ளிட்ட சில காரணங்களால், மஹாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி, கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கிறது. எனவே, மொத்தத்தில் சர்க்கரை உற்பத்தி அளவு குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இதற்கு முன், இக்கூட்டமைப்பு, நாட்டின் சர்க்கரை உற்பத்தி குறைந்து, 2018 –- 19ம் ஆண்டில், 315 லட்சம் டன் ஆக இருக்கும் என, கணித்திருந்தது.கடந்த, 2017 – -18ம் ஆண்டில், 325 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)