பதிவு செய்த நாள்
04 ஜன2019
23:27
புதுடில்லி:கடந்த ஆண்டு டிசம்பரில், சேவைகள் துறையில், வேலைவாய்ப்பு உயர்ந்த போதிலும், ஒட்டுமொத்த வளர்ச்சி மந்தமாக இருந்தது.
இது குறித்து, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018 நவம்பரில், சேவை நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, புதிய, ‘ஆர்டர்’கள் அதிகம் கிடைத்தன; சந்தை நிலவரமும் சாதகமாக இருந்தது.அதனால், சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி இந்தியா எஸ்.பி.ஏ.ஐ.,’ குறியீடு, 53.7 புள்ளிகளாக உயர்ந்தது. இது, அக்டோபரில், 52.2 புள்ளிகளாக இருந்தது. ஜூலைக்கு பின், நவம்பரில் தான், மிக அதிக வளர்ச்சி காணப்பட்டது.
ஆனால், டிசம்பரில் சேவைகள் துறையின் வளர்ச்சி, மந்தமாக இருந்தது, அதனால், இத் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 53.2 புள்ளிகளாக குறைந்துள்ளது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால், அது, வளர்ச்சியை குறிக்கும்.இதன்படி, சேவைகள் துறை, தொடர்ந்து ஏழு மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.
மதிப்பீட்டு மாதத்தில், வேலைவாய்ப்பு தவிர, இதர பிரிவுகளின் வளர்ச்சி மந்தமாக இருந்த தால், ஆண்டு இறுதி, ஏமாற்றத்தில் முடிவடைந்துள்ளது.சேவைகள் துறையில், தேவைப்பாடு குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக, புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்து உள்ளன.
மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.சி., –பி.எம்.ஐ.ஓ., குறியீடு,53.6 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது நவம்பரில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 54.5 புள்ளிகளாக உயர்ந்து காணப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|