சேவைகள் துறை வளர்ச்சியில் மந்த நிலை:‘நிக்கி – மார்கிட்’ ஆய்வறிக்கை வெளியீடு சேவைகள் துறை வளர்ச்சியில் மந்த நிலை:‘நிக்கி – மார்கிட்’ ஆய்வறிக்கை ... ...  இழந்த சொத்தை மீட்கும்  பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இழந்த சொத்தை மீட்கும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ...
மத்திய ஜி.எஸ்.டி., ரூ.197.50 கோடி திருப்பூரில் 11 மாதத்தில் வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
23:34

திருப்பூர்:திருப்பூரில், கடந்தாண்டின் முதல், 11 மாதத்தில், மத்திய, ஜி.எஸ்.டி., வரி வசூல், 197.50 கோடி ரூபாயை எட்டியுள்ளது.


கடந்த, 2017, ஜூலை முதல், ஜி.எஸ்.டி., வரி நடைமுறையில் உள்ளது. திருப்பூரில், பின்னலாடை நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. வணிக வரித் துறையில் பதிவு பெற்று, 42 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்; 18 ஆயிரம் வர்த்தகர்கள், மத்திய, ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர்.


திருப்பூர் மண்டல மத்திய,ஜி.எஸ்.டி., அலுவலகம்,ஆறு சரகங்களுடன் இயங்கி வருகிறது. கடந்தாண்டு, ஜன., – நவ., வரையிலான, 11 மாதத்தில், மாவட்டத்தில், 197.50 கோடி ரூபாய் மத்திய, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான, நிதியாண்டின் முதல் எட்டு மாதத்தில் மட்டும், 139 கோடி ரூபாய் மத்திய, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வரி, திரும்ப வழங்கப்படுகிறது.


அதன்படி, கடந்தாண்டு, ஜன., – நவ., வரை, 2,230 ஏற்றுமதியாளர்கள், 367.33 கோடி ரூபாய், ‘ரீபண்டு’ கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 2,064 பேருக்கு, 341.84 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது; பிற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.மத்திய, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், ‘திருப்பூரை பொறுத்தவரை, உள்நாட்டு வர்த்தகத்தை விட, ஏற்றுமதி வர்த்தகமே அதிகளவு உள்ளது; எனவே, வரி வசூலை விட, ரீபண்டு தொகை அதிகமுள்ளது’ என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)