பதிவு செய்த நாள்
04 ஜன2019
23:34
திருப்பூர்:திருப்பூரில், கடந்தாண்டின் முதல், 11 மாதத்தில், மத்திய, ஜி.எஸ்.டி., வரி வசூல், 197.50 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
கடந்த, 2017, ஜூலை முதல், ஜி.எஸ்.டி., வரி நடைமுறையில் உள்ளது. திருப்பூரில், பின்னலாடை நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. வணிக வரித் துறையில் பதிவு பெற்று, 42 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்; 18 ஆயிரம் வர்த்தகர்கள், மத்திய, ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர்.
திருப்பூர் மண்டல மத்திய,ஜி.எஸ்.டி., அலுவலகம்,ஆறு சரகங்களுடன் இயங்கி வருகிறது. கடந்தாண்டு, ஜன., – நவ., வரையிலான, 11 மாதத்தில், மாவட்டத்தில், 197.50 கோடி ரூபாய் மத்திய, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான, நிதியாண்டின் முதல் எட்டு மாதத்தில் மட்டும், 139 கோடி ரூபாய் மத்திய, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வரி, திரும்ப வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்தாண்டு, ஜன., – நவ., வரை, 2,230 ஏற்றுமதியாளர்கள், 367.33 கோடி ரூபாய், ‘ரீபண்டு’ கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 2,064 பேருக்கு, 341.84 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது; பிற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.மத்திய, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், ‘திருப்பூரை பொறுத்தவரை, உள்நாட்டு வர்த்தகத்தை விட, ஏற்றுமதி வர்த்தகமே அதிகளவு உள்ளது; எனவே, வரி வசூலை விட, ரீபண்டு தொகை அதிகமுள்ளது’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|