மத்திய ஜி.எஸ்.டி., ரூ.197.50 கோடி திருப்பூரில் 11 மாதத்தில் வசூல் மத்திய ஜி.எஸ்.டி., ரூ.197.50 கோடி திருப்பூரில் 11 மாதத்தில் வசூல் ...  ஏலக்காய் விலை கிலோ ரூ.2,000 ஏலக்காய் விலை கிலோ ரூ.2,000 ...
இழந்த சொத்தை மீட்கும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
23:37

தொலை தொடர்பு துறை வசம் இருக்கும், பி.எஸ்.என்.எல்., சொத்துக்கள் அனைத்தும், அந்நிறுவனத்தின் பெயருக்கே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் தொலை தொடர்பு சேவையிலிருந்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 2000ம் ஆண்டு தனியாக துவங்கப்பட்டது.


அப்போது, பி.எஸ்.என்.எல்.,லுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், தொலை தொடர்பு துறை வசம் இருந்தன. தற்போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள், அதன் வசம் மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், நாடு முழுவதும் உள்ளன; இவையனைத்தும், மத்திய தொலை தொடர்பு துறை வசம் இருக்கின்றன.இவற்றை, பி.எஸ்.என்.எல்., பெயருக்கு மாற்றித் தர வலியுறுத்தி, 18 ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டது.


சமீபத்தில், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.இதன் பயனாக, சென்னையில், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் உட்பட பல்வேறு அலுவலகங்களும், அதிகாரிகள் குடியிருப்புகளும், பி.எஸ்.என்.எல்., பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன.தொடர்ந்து, மேலும் பல்வேறு அலுவலகங்களை, பி.எஸ்.என்.எல்.,லுக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சொத்துக்கள் பராமரிப்பு என, தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)