பதிவு செய்த நாள்
04 ஜன2019
23:37
தொலை தொடர்பு துறை வசம் இருக்கும், பி.எஸ்.என்.எல்., சொத்துக்கள் அனைத்தும், அந்நிறுவனத்தின் பெயருக்கே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் தொலை தொடர்பு சேவையிலிருந்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 2000ம் ஆண்டு தனியாக துவங்கப்பட்டது.
அப்போது, பி.எஸ்.என்.எல்.,லுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், தொலை தொடர்பு துறை வசம் இருந்தன. தற்போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள், அதன் வசம் மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், நாடு முழுவதும் உள்ளன; இவையனைத்தும், மத்திய தொலை தொடர்பு துறை வசம் இருக்கின்றன.இவற்றை, பி.எஸ்.என்.எல்., பெயருக்கு மாற்றித் தர வலியுறுத்தி, 18 ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டது.
சமீபத்தில், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.இதன் பயனாக, சென்னையில், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் உட்பட பல்வேறு அலுவலகங்களும், அதிகாரிகள் குடியிருப்புகளும், பி.எஸ்.என்.எல்., பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன.தொடர்ந்து, மேலும் பல்வேறு அலுவலகங்களை, பி.எஸ்.என்.எல்.,லுக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சொத்துக்கள் பராமரிப்பு என, தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|