பதிவு செய்த நாள்
05 ஜன2019
23:30
திண்டுக்கல்:பனிப் பொழிவால் ஏலக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டதால், திண்டுக்கல்லில் ஏலக்காய் கிலோவுக்கு, 600 அதிகரித்து, 2,000 ரூபாய்க்கு விற்றது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, கொடைக்கானல், தேனி மாவட்டம் போடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஏலக்காய் சாகுபடியாகிறது.கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவால், ஏலக்காய் செடியிலேயே கருகி வருகிறது; மேலும் பூச்சி தாக்குதலாலும் இந்த ஆண்டு ஏலக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு தினமும், 2 டன் ஏலக்காய் விற்பனைக்கு வரும். கடந்த வாரம், 1 கிலோ, 1,450 ரூபாய் வரை விற்றது. சாகுபடி குறைவு, வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி, வரத்து குறைவு, பொங்கலுக்கு தேவை அதிகரிப்பு போன்றவற்றால், ஏலக்காய் கிலோவுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, நேற்று, 2,000 ரூபாய்க்கு விற்றது.இது குறித்து, வியாபாரி ஒருவர் கூறியதாவது:இந்த ஆண்டு விளைச்சல் குறைவு. பொங்கலை முன்னிட்டு, விலை அதிகரித்து உள்ளது. வரத்து குறைவால், இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|