பதிவு செய்த நாள்
06 ஜன2019
23:39
கடந்த வாரம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி,
300 புள்ளிகள் சரிந்து, வர்த்தகம் முடிவு பெற்றது. 2018ம் ஆண்டின்
கடைசி வாரத்தில், சந்தைகள் சரிவில் முடிந்தன.
சர்வதேச சந்தைகளில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வார ஆரம்ப நாட்களில் விடுமுறையாக இருந்தது.‘மூடி’
கருத்துக் கணிப்பு நிறுவனம், அதன், 2018- – 19ம் ஆண்டுக்கான உலகப்
பொருளாதார வளர்ச்சி குறித்த தொகுப்பில், இந்திய பொருளாதாரம்,
குறிப்பிட்ட காலத்தில், 7.5 சதவீதமாக இருக்கும் என,
தெரிவித்துள்ளது.
மேலும், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை, நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்றும்
எச்சரித்துள்ளது.வார இறுதியில் வெளிவந்த அமெரிக்க பொருளாதார
காரணியான, புதிதாக விவசாயம் சார்ந்த தொழில் துறைகளில் வேலைக்கு
நியமிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம் வெளிவந்தது. இது
எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த, 10 மாதங்களில்
இல்லாத அளவாகும்.
‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 8
லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் பங்கு
விலை அதிகரிப்பு, தேசிய குறியீட்டு எண் நிப்டி உயர காரணமானது.
அதேசமயம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், யெஸ்
பேங்க் போன்றவை, இண்டெக்ஸ் வளர்ச்சியை குறைத்தன.
கடந்த வாரம்,
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர்
மாதத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, அரசு கருவூலங்களின்
சந்தையில் கொள்முதல் செய்வதாக அறிவித்தது. இது, சந்தையில்
சாதகமான போக்கிற்கு வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில்,
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதி,
கடந்த ஐந்து ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
பெருகி வரும்
தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் தேவை போன்றவை,
இத்தகைய இறக்குமதியை அதிகரிப்பதற்கான காரணம். இவை, நம் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.இந்த வாரத்தைப் பொறுத்தவரை, நிப்டி ரெசிஸ்டென்ட், 10,810 மற்றும் 10,960 ஆகும். சப்போர்ட், 10,615 ஆகும்.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|