பதிவு செய்த நாள்
07 ஜன2019
00:22
பி.எப்.,
உறுப்பினர்கள் தங்கள் முதலீட்டில் சமபங்கு வாய்ப்பை அதிகமாக்கி
கொள்ளும் வாய்ப்பு அறிமுகமாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான மென்பொருள், பி.எப்., நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.
பி.எப்., நிதியை நிர்வகித்து வரும் அமைப்பு தற்போது, முதலீடு செய்யக்கூடிய டெபாசிட்டில், 15 சதவீதம் தொகையை, ஈ.டி.எப்.,ல் முதலீடு செய்து வருகிறது. இது சமபங்கு சார்ந்த முதலீடாக அமைந்தாலும், உறுப்பினர்கள் கணக்கில் இது தனியே பிரதிபலிப்பதில்லை.
இந்நிலையில், பி.எப்., அமைப்பு, ரொக்கம் மற்றும் ஈ.டி.எப்., சார்ந்த முதலீட்டை தனித்தனியே
காண்பிக்கும் வகையிலான மென்பொருளை உருவாக்கி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.இந்த
மென்பொருள் பயன்பாட்டிற்கு வந்த பின், உறுப்பினர்கள்
விரும்பினால், சம்பங்கு சார்ந்த முதலீட்டை அதிகரித்துக்கொள்ள
வாய்ப்பளிக்கப்படும் எனத்தெரிகிறது. மேலும் பல டிஜிட்டல் சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|