பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள்பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள் ...  உலக முதலீட்டு பார்வையின் தேவை உலக முதலீட்டு பார்வையின் தேவை ...
பி.பி.எப்., கணக்கை புதுப்பிப்பது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
00:26

எதிர்­கால பாது­காப்­பிற்கு உத­வக்­கூ­டிய, பி.பி.எப்., எனப்­படும் பொது சேம­நல நிதி, பர­வ­லாக நாடப்­படும், முத­லீட்டு வாய்ப்­பாக இருக்­கிறது.


பி.பி.எப்., முத­லீட்­டின் முக்­கிய அம்­சங்­களில் ஒன்று, ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்­சம், 500 ரூபா­யா­வது இந்த கணக்­கில் செலுத்தி வர வேண்­டும் என்­ப­தா­கும். இவ்­வாறு ஓராண்­டுக்கு மேல் குறைந்த பட்ச தொகை செலுத்த தவ­றி­னால், அந்த, பி.பி.எப்., கணக்கு செய­லி­ழந்­த­தாகி விடும்.


பி.பி.எப்., கணக்கு செய­லி­ழக்­ கா­மல் இருக்க, மறக்­கா­மல் ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்­டும். கணக்கு செய­லி­ழப்­ப­தால், அது­வரை முத­லீடு செய்த தொகையை இழக்­கும் நிலை ஏற்­ப­டாது. ஆனால், அதில் தொடர்ந்து பணம் செலுத்த முடி­யாது.


மேலும், கணக்கு செய­லி­ழந்­தால், பி.பி.எப்., தொடர்­பான சலு­கை­க­ளை­யும் பெற முடி­யாது. உதா­ர­ண­மாக, உறுப்­பி­னர்­கள் கணக்கு துவங்­கிய மூன்­றாம் ஆண்டு முதல் ஆறாம் நிதி­யாண்டு வரை, 25 சத­வீத தொகையை கட­னாக பெற்­றுக்­கொள்­ள­லாம். கணக்கு செய­லி­ழந்­தால் இந்த வசதி கிடை­யாது.


அதே­போல், ஏழாம் நிதி­யாண்டு நிறை­வுக்­குப்­பின், பகுதி அளவு தொகையை விலக்கு கொள்­ளும் வச­தி­யையும் பயன்படுத்த முடியாது. முன்­கூட்­டியே கணக்கை முடித்­துக்­கொள்­ள­வும் அனு­மதி இல்லை.


ஆனால், செய­லி­ழந்த, பி.பி.எப்., கணக்கை புதுப்­பித்­துக்­கொள்­ள­லாம். சம்­பந்­தப்­பட்ட வங்கி கிளை அல்­லது அஞ்­சல் அலு­வ­லகத்­தில் எழுத்து வடி­வில் இதற்­கான கோரிக்­கையை அளிக்க வேண்­டும். அதோடு, கணக்கு செய­லி­ழந்த காலத்­திற்­கான குறைந்­த­ பட்ச தொகையை அபராதத்­து­டன் செலுத்த வேண்­டும். அதன் பிறகு கணக்கு சரி­பார்க்­கப்­பட்டு, மீண்­டும் இயக்க அனு­ம­திக்­கப்­படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)