பதிவு செய்த நாள்
07 ஜன2019
00:32
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில், சராசரி
முதலீட்டாளர்கள் தங்கள் இலக்குகளுக்கு ஏற்ற வகையில் முதலீட்டை தேர்வு செய்வது அவசியம்.
நிதித்துறையை
பொறுத்தவரை, 2018ம் ஆண்டு ஏற்ற இறக்கங்கள் மிகுந்ததாக
இருந்தாலும், மியூச்சுவல் பண்ட் துறைக்கு பிரகாசமான ஆண்டாகவே
அமைந்துள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு
அதிகரித்ததோடு, முதலீடும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’எஸ்.ஐ.பி., முறையில், சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிதியாண்டில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மாத
அடிப்படையில், 9.74 லட்சம், எஸ்.ஐ.பி., கணக்குகளை பெற்றுள்ளதாக,
இத்துறைக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
மியூச்சுவல்
பண்ட்கள், மறு முதலீட்டு மூலம் பலன் பெற உதவுகின்றன. நீண்ட கால
நோக்கில் இவை சிறந்த பலன் தருவதாக கருதப்படுகிறது. சந்தையின் ஏற்ற
இறக்கத்தை பொருட்படுத்தாமல், முதலீட்டாளர்கள் தங்கள்,
எஸ்.ஐ.பி., முதலீட்டை தொடர வேண்டும் என, நிதி வல்லுனர்கள் தொடர்ந்து
வலியுறுத்துகின்றனர்.
இந்த ஆண்டும் மியூச்சுவல் பண்ட் முதலீடு துறையில் வளர்ச்சி தொடரும்
என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மியூச்சுவல் பண்ட்
முதலீட்டின் அடிப்படையை புரிந்து கொள்ளாதவர்கள் தவறான முடிவுகளை
எடுக்கும் நிலை உள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீட்டை தேர்வு
செய்யும் போது வழக்கமாக செய்யும் தவறுகளை தவிர்ப்பதன் மூலம்,
சரியான முதலீட்டு முடிவை மேற்கொள்ளலாம்.
அதிக நிதிகள்
சமபங்கு
நிதிகள், டெப்ட் பண்ட், ஹைபிரீட் பண்ட் என, பலவகையான மியூச்சுவல்
பண்ட் திட்டங்கள் உள்ளன. இவற்றில் முதலீட்டாளர்கள் தங்கள்
இலக்குகளுக்கு ஏற்ற திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால்,
பல்வேறு நிதிகளில் முதலீடு செய்வது பல முதலீட்டாளர்கள் செய்யும் தவறாக இருக்கிறது.
பலரும்
பரவலாக முதலீடு செய்வதாக நினைத்துக்கொண்டு, பல நிதிகளில் முதலீடு
செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர். பரவலாக்கம் அவசியம்
என்றாலும், அதிக நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் அவற்றிம்
செயல்பாட்டை கண்காணிப்பது சிக்கலாகலாம். உண்மையில், சந்தையில் பரவலான
முதலீடுகளை கொண்ட சில நிதிகளை தேர்வு செய்து, அவற்றில் முதலீடு
செய்வது பொருத்தமாக இருக்கும். இதே போல், சந்தையின் போக்கை கணித்து
அதற்கேற்ப நிதிகளை தேர்வு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
ரிஸ்க் அம்சம்
சரியான
நிதியில், எஸ்.ஐ.பி., முறையில் முதலீட்டை தொடர்வது நல்லது. இது சீரான
முதலீட்டு பழக்கத்தை அளிப்பதோடு, முதலீடும் வளர உதவும். மேலும்,
முதலீட்டிற்கான நிதிகளை தேர்வு செய்யும் போது, முதலீட்டாளர்கள்
தங்கள் ரிஸ்க் தன்மையையும் மனதில் கொள்ள வேண்டும்.
செயல்பாடு
அல்லது பலன் அடிப்படையில் மட்டும் நிதிகளை தேர்வு செய்யாமல், அவை
தங்கள் ரிஸ்க் தன்மைக்கு ஏற்றதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
முக்கியமாக மற்றவர்கள் முதலீடு செய்வதை பார்த்து செயல்படுவதை
கைவிட வேண்டும்.மியூச்சுவல் பண்ட் முதலீடு சிறந்தவை என்றாலும்,
எல்லா பணத்தையும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது
சிக்கலாகலாம். முதலில் எந்த வகை முதலீட்டில் எவ்வளவு முதலீடு
செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதை தீர்மானித்துக்கொள்ள
வேண்டும்.
அதன் அடிப்படையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டு
வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். எப்படியும், எந்த ஒரு முதலீட்டு
சாதனத்திலும் மொத்த அல்லது அதிக பணத்தை போட்டு வைப்பது ஏற்றது அல்ல.
முக்கியமாக, மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் செயல்பாட்டை தொடர்ந்து
கவனித்து வர வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|