பதிவு செய்த நாள்
08 ஜன2019
10:49
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன.,08) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்ததாலும் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 58.53 புள்ளிகள் சரிந்து 35,791.63 புள்ளிகளாகவும், நிப்டி 19.35 புள்ளிகள் சரிந்து 10,752.90 புள்ளிகளாகவும் உள்ளன. ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி வங்கி, கோடாக் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎப்சி, மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.01 சதவீதம் சரிவடைந்துள்ளன.
அதே சமயம் டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், யெஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.54 சதவீதம் உயர்வடைந்துள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஷாங்காய், கொரியா, தைவான் பங்குச்சந்தைகள் சரிவுடனும், ஜப்பான் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|