ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று கூடுகிறது :சிறிய நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்பு ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று கூடுகிறது :சிறிய நிறுவனங்களுக்கு சலுகைகள் ... ...  மல்லிகை, முல்லை விலை உயர்வு மல்லிகை, முல்லை விலை உயர்வு ...
‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2019
23:19

புதுடில்லி:மத்திய அரசு, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம், வரும் நிதியாண்டில், 7,000 கோடி ரூபாய் திரட்டதிட்டமிட்டுள்ளது.


இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஏர் இந்தியா, 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 76 சதவீத பங்கு மூலதனம் மேற்கொண்டுள்ளது. இப்பங்குகளை விற்று, நிர்வாகப் பொறுப்பை, தனியாரிடம் ஒப்படைக்க, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.


ஆனால், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மற்றும் 8,000 கோடி ரூபாய் கடன் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையால், ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.இதையடுத்து, ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்கள் மற்றும் அசையா சொத்துக்களை விற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வரும், 2019 -– 20ம் நிதியாண்டின், முதல் அரையாண்டில், ஏர் இந்தியா நிறுவன பங்கு விற்பனை மூலம், 7,000 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, ஏர் இந்தியாவை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், 2,345 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு, சமீபத்தில் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)