‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம் ‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம் ...  மல்லிகை, முல்லை விலை உயர்வு மல்லிகை, முல்லை விலை உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இலங்கை மத்திய வங்கிக்கு ஆர்.பி.ஐ., ரூ.2,800 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2019
23:21

புதுடில்லி:இலங்கை மத்திய வங்கிக்கு, ‘ஸ்வாப்’ திட்டத்தின் கீழ், 40 கோடி டாலர் நிதியுதவி அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 2,800 கோடியாகும்.


இது குறித்து, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:


இந்திய ரிசர்வ் வங்கி, மிகச் சரியான நேரத்தில், 40 கோடி டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்து உள்ளது. இது, இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், இறக்குமதி செலவுகளை சமாளிக்கவும், கடனை திரும்பச் செலுத்தவும் துணை புரியும். ‘சார்க்’ நாடுகளுக்கான பணமாற்று திட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி, நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.


மேலும், 100 கோடி டாலர் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.ரிசர்வ் வங்கியின் நிதிஉதவி, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஊக்குவிக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இலங்கை அதிபர் சிறிசேன, 2018 அக்டோபரில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து, ராஜபக்சேவை நியமித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன.


இதனால், ஏராளமான அன்னிய முதலீடு வெளியேறியது; இலங்கை அரசின் கடன் தகுதி மதிப்பீடு குறைந்தது.டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு, 19 சதவீதம் குறைந்து, ஆசியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கரன்சிகளில் ஒன்றாக இடம் பெற்றது.இத்தகைய சூழலில், இந்திய ரிசர்வ் வங்கி, இலங்கை அரசுக்கு நெருக்கடியை சமாளிக்க, நிதியுதவி வழங்கி உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)