பதிவு செய்த நாள்
09 ஜன2019
23:21
புதுடில்லி:இலங்கை மத்திய வங்கிக்கு, ‘ஸ்வாப்’ திட்டத்தின் கீழ், 40 கோடி டாலர் நிதியுதவி அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 2,800 கோடியாகும்.
இது குறித்து, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ரிசர்வ் வங்கி, மிகச் சரியான நேரத்தில், 40 கோடி டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்து உள்ளது. இது, இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், இறக்குமதி செலவுகளை சமாளிக்கவும், கடனை திரும்பச் செலுத்தவும் துணை புரியும். ‘சார்க்’ நாடுகளுக்கான பணமாற்று திட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி, நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், 100 கோடி டாலர் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.ரிசர்வ் வங்கியின் நிதிஉதவி, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஊக்குவிக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இலங்கை அதிபர் சிறிசேன, 2018 அக்டோபரில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து, ராஜபக்சேவை நியமித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன.
இதனால், ஏராளமான அன்னிய முதலீடு வெளியேறியது; இலங்கை அரசின் கடன் தகுதி மதிப்பீடு குறைந்தது.டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு, 19 சதவீதம் குறைந்து, ஆசியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கரன்சிகளில் ஒன்றாக இடம் பெற்றது.இத்தகைய சூழலில், இந்திய ரிசர்வ் வங்கி, இலங்கை அரசுக்கு நெருக்கடியை சமாளிக்க, நிதியுதவி வழங்கி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|