பதிவு செய்த நாள்
11 ஜன2019
00:06
மும்பை:தகவல்
தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறுவனத்தின் நிகர
லாபம், நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், அக்., – டிசம்பர் வரையிலான
மூன்றாவது காலாண்டில், 24.1 சதவீதம் அதிகரித்து, 8,105 கோடி
ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, 2017 -– 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 6,531 கோடி ரூபாயாக இருந்தது.இதே
காலத்தில், இந்நிறுவனத்தின் வருவாய், 20.8 சதவீதம் உயர்ந்து, 30
ஆயிரத்து, 904 கோடியில் இருந்து, 37 ஆயிரத்து, 338 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிறுவனத்தின்
மொத்த வருவாயில், ‘டிஜிட்டல் சேவை’கள் பிரிவின் பங்கு, 30.1
சதவீதம்; அதன் ஆண்டு வளர்ச்சி, 52.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மதிப்பீட்டு
காலாண்டில், டி.சி.எஸ்., 6,827 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது. இதன்
மூலம், இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை, நான்கு
லட்சத்து, 17 ஆயிரத்து, 929 ஆக உயர்ந்துள்ளது.டி.சி.எஸ்., நடப்பு
நிதியாண்டிற்கான, மூன்றாவது இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.
இதன்படி, டி.சி.எஸ்., பங்கு முதலீட்டாளர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு,
4 ரூபாய் கிடைக்கும்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|