பதிவு செய்த நாள்
11 ஜன2019
00:09
புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் தயாரிப்புகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளதாவது:பொருட்களின் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக, தவிர்க்க முடியாமல் வாகனங்களின் விலையை, 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வேண்டியதாகி விட்டது.
இந்த விலையேற்றம், மாடல்களை பொறுத்து வேறுபடும்.இந்த விலை உயர்வு, உடனடியாக
அமலுக்கு வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் மாதத்திலேயே, ஜனவரி முதல் விலையேற்றம் இருக்கும் என, மாருதி சுசூகி தெரிவித்திருந்தது. இருப்பினும், எவ்வளவு ரூபாய் அதிகரிக்கும் என்பது குறித்து தெரிவிக்காமல் இருந்தது.
தற்போது, பல கார்களுக்கு விலையை அதிகரித்திருந்தாலும், அண்மையில் அறிமுகமான புதிய, ‘எர்டிகா’ மாடலுக்கு இந்த விலை உயர்வு இல்லை எனத் தெரிகிறது.மாருதி சுசூகி நிறுவனத்தை போலவே, ‘டொயொட்டா கிர்லோஸ்கர், இசுசூ மோட்டார்ஸ்’ ஆகிய நிறுவனங்களும், ஜனவரி முதல் விலையேற்றப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|