பதிவு செய்த நாள்
11 ஜன2019
00:16
திருப்பூர்:கோவை கோட்ட வணிக வரித் துறைக்கு, 2018ல், 1,832.55 கோடி ரூபாய் வரி வசூலாகிஉள்ளது.
தமிழக
வணிக வரித் துறையின் கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட, மூன்று
வருவாய் மாவட்டங்களுடன், கோவை வணிக வரி கோட்டம் இயங்குகிறது.
கோட்டத்தில், 1.25 லட்சம் வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி., பதிவு
செய்துள்ளனர்.
கடந்த, 2018 ஜன., முதல், டிச., வரை, கோவை
கோட்டத்தில், ‘வாட்’ வரியாக, 24.62 கோடி, வாட் வரியில் இல்லாத
பொருட்களுக்கு, 580.95 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.
மேலும், 1,226.98 கோடி ரூபாய், எஸ்.ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.
மொத்தம், கோவை வணிக வரி கோட்டத்தில், 1,832.55 கோடி ரூபாய் வரி
வசூலிக்கப்பட்டுள்ளது.
வணிக வரித் துறை அதிகாரிகள்
கூறுகையில், ‘கோவை கோட்டத்தில், ஜி.எஸ்.டி.,க்கு முன், ஒரு லட்சம்
வர்த்தகர்களே இருந்தனர். தற்போது, ஜாப் ஒர்க், சேவை துறைகளைச்
சார்ந்த, 25 ஆயிரம் பேர், புதிதாக இணைந்துள்ளனர். வர்த்தகர்
எண்ணிக்கை அதிகரிப்பால்,
வரி வசூலும் அதிகரித்துள்ளது’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|