பதிவு செய்த நாள்
11 ஜன2019
23:46
மும்பை:வெளிநாடு வாழ் இந்தியர்கள், 2018, நவம்பரில், இந்திய வங்கிகளில் செய்த டெபாசிட், 415 கோடி டாலர் அதிகரித்து, 12 ஆயிரத்து, 568 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இது, அக்டோபரில், 12 ஆயிரத்து, 153 கோடி டாலராக இருந்தது.பெரும்பான்மையான டெபாசிட், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுகளில் வாழ்வோருக்கான சேமிப்பு கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த கணக்கில், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டாலர், இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு, வரவு வைக்கப்படும்.இந்த டெபாசிட்டுக்கு, உள்நாட்டு வட்டி விகிதம் பொருந்தும். எனினும், அன்னியச் செலாவணியில்ஏற்படும் மாற்றங்கள்தான், முதலீட்டின் மீதான வருவாய் உயரவும், குறையவும் காரணமாக இருக்கும்.
கடந்த ஆண்டு, செப்., 10ல், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 74.39 ஆக சரிவடைந்தது. இது, நவம்பரில், 69.58 ஆக உயர்ந்தது.ஆக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், நவம்பரில் வெளிநாடு வாழ் இந்தியரின் டெபாசிட் உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|