பதிவு செய்த நாள்
11 ஜன2019
23:48
சென்னை:நாட்டின்
முன்னணி பேருந்து தயாரிப்பு நிறுவனமான, அசோக் லேலண்ட், மாநில அரசு
போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து, 2,580 பேருந்துகள் உற்பத்திக்கான ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது.
‘அசோக்
லேலண்ட்’ நிறுவனம், தமிழகம், உத்தர பிரதேசம், சண்டிகர் ஆகிய
மாநில அரசுகளின் போக்குவரத்துக் கழகங்களுக்கு, 2,580
பேருந்துகளை உற்பத்தி செய்து வழங்க ஒப்பந்தம்
செய்துள்ளது.இது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்,
வினோத் கே.தாசரி கூறியதாவது:
அதிநவீன தொழில்நுட்பங்களுடனும், புதுமையான கண்டுபிடிப்புகளையும் ஒருங்கிணைத்து,
உயர் தரத்தில் தயாரிப்புகளை வழங்குகிறோம்.எங்களது சிறப்பு நிபுணத்துவம், இந்தியாவில் பேருந்துகளுக்கான சந்தையில், முதன்மையான இடத்தை தொடர்ந்து தக்க வைக்க உதவுகிறது.நடப்பு, 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் இப்பேருந்துகள், அந்தந்த மாநில போக்கு
வரத்துக் கழகங்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|