பதிவு செய்த நாள்
11 ஜன2019
23:52
பெங்களூரு:‘இன்போசிஸ்’
நிறுவனம், பங்கு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு, ‘டிவிடெண்டு’
அறிவித்துள்ளது.அத்துடன், வெளிச் சந்தையில் இருந்து, 8,260 கோடி
ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கு சிறப்பு டிவிடெண்டை அறிவித்து உள்ளது. இதன்படி, பங்கு முதலீட்டாளர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு, 4 ரூபாய் வழங்கப்படும். இதற்கான பதிவு நாள், ஜன., 25.நிறுவனத்தின் தனி இயக்குனர், கிரண் மசூம்தார் ஷாவின் பதவிக் காலத்தை இரண்டாம் முறையாக நீட்டிக்கவும், இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும், மூலதன ஒதுக்கீடு கொள்கைப்படி, வெளிச் சந்தையில் இருந்து, பங்குகளை திரும்ப வாங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.ஒரு பங்கு, 800 ரூபாய் வீதம், 8,260 கோடி ரூபாய்க்கு, வெளிச் சந்தையில் பங்குகள் வாங்கப்படும்.இந்த நடவடிக்கைக்காக, தலைமை செயல்பாட்டு அதிகாரி, தலைமை நிதி அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகர லாபம் சரிவு
இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், அக்டோபர் –
டிசம்பர்
வரையிலான மூன்றாவது காலாண்டில், 29.6 சதவீதம் குறைந்து, 3,610 கோடி
ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில்,
5,129 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், நிறுவனத்தின் மொத்த
வருவாய், 17 ஆயிரத்து, 794 கோடியில் இருந்து, 21 ஆயிரத்து, 400 கோடி
ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில், நிறுவனத்தின்,
‘டிஜிட்டல்’ பிரிவின் பங்கு, 33.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா,
ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை
காரணமாக, நிறுவனங்கள் குறைந்த நாட்களே இயங்கும். இது,
அந்நாடுகளைச் சார்ந்துள்ள, இந்திய, ஐ.டி., நிறுவனங்களின்,
மூன்றாவது காலாண்டு செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது
வழக்கம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|