பதிவு செய்த நாள்
12 ஜன2019
23:37
புதுடில்லி:ஐ.சி.எஸ்.ஐ., எனப்படும், இந்திய நிறுவன செயலர்கள் கல்வி மையத்தின் மத்தியக் குழு உறுப்பினராக, பட்டயக் கணக்காளர், சந்தான கிருஷ்ணன், மத்திய அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர், பட்டயக் கணக்காளர் துறையில், 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
நிறுவன நிர்வாகத் துறை வல்லுனரான இவர், டாடா குழும நிறுவனங்கள், ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் ஐ.டி.பி.ஐ., வங்கிகளின் இயக்குனர் குழுக்களில் உறுப்பினராக உள்ளார்.சென்னையில், 1978ல் இவர் தோற்றுவித்த, பி.கே.எப்.எஸ். அண்டு எஸ். நிறுவனம், இன்று, பி.கே.எப். இந்தியா என்ற பெயருடன், பல நகரங்களில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் விரிவாக்கம் கண்டுள்ளது.
இந்நிறுவனம்,எண்ணற்ற வாடிக்கை நிறுவனங்களுக்கு, நிர்வாகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|