பதிவு செய்த நாள்
12 ஜன2019
23:40
புதுடில்லி:நடப்பு,
2018 -– 19ம் நிதியாண்டின், அக்., – டிச., காலாண்டில், ‘ஏர் இந்தியா’
நிறுவனத்தின் பயணியர் பிரிவு வருவாய், 23 சதவீதம் உயர்ந்து, 5,538
கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, 2017 -– 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 4,615 கோடி ரூபாயாக இருந்தது.
அதேசமயம்,
இதே காலத்தில், ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்தோர்
எண்ணிக்கை, 4 சதவீதம் மட்டுமே அதிகரித்து, 53.28 லட்சத்தில்
இருந்து, 55.27 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதிப்பீட்டு காலாண்டில், 15 புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை, நிறுவனம் மேற்கொண்டது. வருவாயுடன் ஒப்பிடும் போது, பயணியர் எண்ணிக்கை வளர்ச்சி குறைவாகவுள்ளது. இருந்த
போதிலும், பயண துாரம் அடிப்படையிலான காலி இருக்கைகளின்
விகிதாசாரத்தை பொறுத்தவரை, பயணியர் எண்ணிக்கை வளர்ச்சி அதிகம் எனலாம்.
தற்போது, 122 விமான போக்குவரத்து சேவைகளை, ஏர் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்
நிறுவனத்தின் வருவாயில், 65 சதவீதம், பன்னாட்டு விமான சேவைகளில் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
லாப பாதைக்கு திரும்புமா?
பொதுத்
துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், 2007ல், அதன், இந்தியன்
ஏர்லைன்ஸ் துணை நிறுவனத்தை இணைத்துக் கொண்டது. அது முதல், இழப்பை
சந்தித்து வருகிறது. தற்போது, 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
நெருக்கடியில் உள்ளது. இந்நிறுவனத்தை விற்க, மத்திய அரசு எடுத்த
முயற்சிகள் வீணாகின.இதையடுத்து, ஏர் இந்தியாவில், கூடுதல்
மூலதனம் மேற்கொண்டு, புத்துயிரூட்டும் முயற்சியில், மத்திய அரசு
ஈடுபட்டுள்ளது.
ஏர் இந்தியா நிர்வாகத்தை முழுமையாக சீரமைக்க,
முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை செயல் அதிகாரி முதல், பல
நிலைகளில், அனுபவம் வாய்ந்த வல்லுனர்களை நியமிக்கும் திட்டம்
தயாராகி வருகிறது. மேலும், நிறுவனத்தின் கடன் பிரச்னைக்கு தீர்வு
காண்பது குறித்தும், மத்திய நிதியமைச்சகத்துடன், விமான
போக்குவரத்து அமைச்சகம் பேசி வருகிறது.
கடன்களுக்கு தீர்வு
காண்பதுடன், சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட
உள்ளதால், மீண்டும் ஏர் இந்தியா லாப வானில்சிறகடித்து பறக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|