பதிவு செய்த நாள்
12 ஜன2019
23:42
புதுடில்லி:யெஸ் பேங்க் செயல்சாரா பகுதி நேர தலைவராக, அவ்வங்கியின் தனி இயக்குனர், பிரம்ம தத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த, 2013 முதல், வங்கியின் நிர்வாகக் குழுவில் உள்ள இவர், நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், 37 ஆண்டுகளாக, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசு துறைகளில், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய அமைச்சக செயலகம் மற்றும் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
தனியார் துறையில், நான்காவது மிகப் பெரிய வங்கியாக யெஸ் பேங்க் திகழ்கிறது. இதன் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ரானா கபூர், இம்மாத இறுதியில் பதவி விலகுகிறார். இப்பொறுப்பிற்கு, இருவர் பெயர் அடிபடுகிறது. ஒருவர், வங்கியின் செயல் அதிகாரியான, ரஜத் மோங்கா. இன்னொருவர், அயல்நாட்டு வங்கி ஒன்றின், தலைமை செயல் அதிகாரி.இதில், நியமனம் செய்யப்பட உள்ளவரை தேர்வு செய்து விட்டதாக, பங்குச் சந்தைகளுக்கு, யெஸ் பேங்க் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விரைவில் யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரி பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|