பதிவு செய்த நாள்
13 ஜன2019
23:44
வங்கி நடுநிலையாளர் அமைப்பிடம் தெரிவிக்கப்படும் வங்கிகள்மீதான புகார், 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தொடர்பானபுகார்கள் இதில் அதிக பங்குவகிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின், இந்தியாவில் வங்கித்துறை போக்கு மற்றும்முன்னேற்றம் தொடர்பான அறிக்கை, 2017 – 18ம் ஆண்டில், வங்கிகள் மீதான புகார் முந்தைய ஆண்டைவிட, 25 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கிறது.
டெபிட் கார்டுகள் மற்றும்கிரெடிட் கார்டு சேவை தொடர்பாகஅதிக அளவில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள்தாங்கள் கோரியிராத நிலையில், கிரெடிட் கார்டு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள புகாரும் அதிகஅளவில் உள்ளது.
வங்கிச்சேவை தொடர்பாக வங்கியில் புகார் அளித்து, உரிய அல்லது திருப்திகரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், வங்கி நடுநிலையாளரிடம் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|