மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய ... ... ஜி.எஸ்.டி.: காத்­தி­ருக்­கும் கோரிக்­கை­கள் ஜி.எஸ்.டி.: காத்­தி­ருக்­கும் கோரிக்­கை­கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
என்.சி.டி.,-யில் முத­லீடு செய்­யும் ­முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2019
23:54

நிரந்தர பலன் தரும் முதலீடுகளில் ஒன்றான, என்.சி.டி., எனப்படும், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
வைப்பு நிதி, மியூச்­சு­வல் பண்ட் போலவே சில்லரை முத­லீட்­டா­ளர்­கள் பரி­சீ­லிக்க கூடிய முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக, என்.சி.டி., எனப்­படும் பங்­கு­க­ளாக மாற்ற முடி­யாத கடன் பத்­தி­ரங்­கள் அமை­கின்­றன. வர்த்­தக நிறு­வ­னங்­கள் தங்­க­ளுக்கு தேவை­யான நிதி திரட்ட, இந்த வகை கடன் பத்­தி­ரங்­களை அவ்­வப்­போது வெளி­யி­டு­கின்­றன.
இந்த பத்­தி­ரங்­க­ளுக்கு வட்டி வழங்­கப்­படும். அண்­மை­யில், மகிந்­திரா பைனான்ஸ் நிறு­வ­னம் கடன் பத்­தி­ரங்­களை வெளி­யி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளது. இதற்கு முன் எச்.டி.எப்.சி., கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்­டது. ஸ்ரீராம் டிரான்ஸ்­போர்ட் பைனான்ஸ் நிறு­வ­ன­மும் கடன் பத்­தி­ரங்­களை அறி­வித்­துள்­ளது.
வரும் ஆண்டு மேலும் பல வர்த்­தக நிறு­வ­னங்­கள் கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட வாய்ப்­பி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக கடன் பத்­தி­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
எனவே, சில்லரை முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இது நல்ல வாய்ப்­பாக அமை­ய­லாம். எனி­னும், இவற்­றில் முத­லீடு செய்­யும் முன், சில முக்­கிய அம்­சங்­களை கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்.‘ரிஸ்க்’ உண்டுபொது­வாக, நிறு­வ­னங்­கள் வெளி­யி­டும் பங்­கு­க­ளாக மாற்ற முடி­யாத கடன் பத்­தி­ரங்­கள் அதிக வட்டி அளிக்க கூடி­யவை. வைப்பு நிதி­யுடன் ஒப்­பி­டும் போது இவற்­றின் வட்டி விகி­தம் அதி­கம். ஆனால், இவற்­றில் ரிஸ்க் அம்­ச­மும் அதி­கம்.
இந்த பத்­தி­ரங்­களை வெளி­யி­டும் நிறு­வ­னங்­கள், குறிப்­பிட்ட வட்டி விகி­தம் அளிக்க ஒப்­புக்­கொள்­கின்­றன. ஏதே­னும் கார­ணங்­க­ளால் நிறு­வ­னத்­தால் பணத்தை திரும்ப செலுத்த முடி­யா­மல் போனால், பணத்தை இழக்­கும் அபா­யம் உள்­ளது. எனவே, முத­லீடு செய்­யும் முன் இந்த பத்­தி­ரங்­க­ளுக்­கான ரேட்­டிங்கை கவ­னிக்க வேண்­டும். ரேட்­டிங் அமைப்­பு­கள் இதை அளிக்­கின்­றன.பொது­வாக, ‘ஏஏஏ’ ரேட்­டிங் பெற்ற பத்­தி­ரங்­கள் பாது­காப்­பானவை என கரு­தப்­ப­டு­கின்­றன. நிறு­வ­னத்­தின் கடன் பத்­தி­ரத்­தில் முத­லீடு செய்­யும் முன், அந்­நி­று­வ­னத்­தின் மதிப்­பை­யும் மன­தில் கொள்ள வேண்­டும்.
குழப்­பம் இருந்­தால் ஒன்­றுக்­கும் மேற்­பட்ட ரேட்­டிங்­கை­யும் ஒப்­பிட்­டுப் ­பார்க்­க­லாம். இருப்­பி­னும், ரேட்­டிங் பாது­காப்பு அம்­சத்தை குறிப்­பதே தவிர, முத­லீட்­டிற்­கான உத்­தி­ர­வா­தம் அல்ல என்­ப­தை­யும் அறிய வேண்­டும்.வட்டி வரு­மா­னம்அதிக ரேட்­டிங் கொண்ட கடன் பத்­தி­ரங்­கள், 9 சத­வீத அள­வில் வட்டி வரு­மா­னம் அளிக்­க­லாம். குறை­வான ரேட்­டிங் கொண்ட பத்­தி­ரங்­க­ளுக்கு வட்டி விகி­தம் அதி­க­மாக இருக்­க­லாம். அதற்­கேற்ப ரிஸ்­கும் அதி­க­மாக இருக்­கும். எனவே, வட்டி விகி­தத்தை மட்­டும் பார்க்க கூடாது. வட்டி வரு­மா­னத்தை மாதாந்­திர, காலாண்டு, ஆண்டு அடிப்­ப­டை­யில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.
மொத்­த­மாக முதிர்­வின் போதும் பெற்­றுக்­கொள்­ள­லாம். மொத்­த­மாக பெறும் போது பலன் சற்று அதி­க­மாக இருக்­க­லாம். வரு­மான தேவைக்­கேற்ப இதை தீர்­மா­னிக்­க­லாம்.பொது­வாக கடன் பத்­தி­ரங்­கள் நீண்ட கால நோக்­கி­லா­னவை. 3 முதல், 10 ஆண்டு வரை முதிர்வு காலம் உண்டு.
நீண்ட கால­மாக முத­லீடு செய்ய தயா­ராக இருப்­ப­வர்­க­ளுக்கு இவை ஏற்­றவை. இந்த பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­தால் வரி விதிப்­பும் பொருந்­தும் என்­பதை அறிய வேண்­டும். எனவே, இவற்­றின் பலனை கணக்­கி­டும் போது, வரி­ வி­திப்­பை­யும் மன­தில் கொள்ள வேண்­டும். அதிக வரி விதிப்பு வரம்­பில் உள்­ள­வர்­களை விட, குறைந்த வரி விதிப்பு வரம்­பில் உள்­ள­வர்­க­ளுக்கு இவை ஏற்­ற­தாக இருக்­கும் என, கரு­தப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)