மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய ... ... ஜி.எஸ்.டி.: காத்­தி­ருக்­கும் கோரிக்­கை­கள் ஜி.எஸ்.டி.: காத்­தி­ருக்­கும் கோரிக்­கை­கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பைபேக்: கையாண்டு வெற்றி பெறு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
00:15

பொது­வாக, லாப­க­ர­மாக இயங்­கும் நிறு­வ­னங்­களில், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நிகர லாபத்­தில் இருந்து, ஒவ்­வொரு ஆண்­டும், ‘டிவி­டெண்ட்’ கொடுக்­கும் மரபு உண்டு. மதிக்­கத்­தக்க நிறு­வ­னங்­கள், இதை கொள்கை சார்ந்து செய்­வது வழக்­கம்.
இந்த டிவி­டெண்ட் கொள்கை, ஒவ்­வொரு தொழி­லி­லும் மாறு­படும். சில தொழில்­களை நடத்­த­வும், வளர்க்­க­வும் அதிக பணம் தேவைப்­ப­டாது. ஆகவே, அத்­த­கைய தொழி­லில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ஒவ்­வொரு ஆண்­டின் இறு­தி­யி­லும், நிகர லாபத்தை பங்­கு­தா­ரர்­க­ளுக்கு எளி­தில் திரும்ப கொடுக்க இய­லும்.
பொது­வாக, முத­லீட்டு தேவை குறை­வாக உள்ள நிறு­வ­னங்­கள், அதிக டிவி­டெண்ட் கொடுக்­கும். இத்­த­கைய நிறு­வ­னங்­கள், நிகர லாபத்­தில் அதிக பணத்தை, முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் கொடுப்­பது என, தெளி­வான கொள்­கையை வகுத்து விடு­வது வழக்­கம்.சமீப காலங்­களில், பல நிறு­வ­னங்­கள், நிகர லாபத்­தில், 20 முதல், 30 சத­வீதம் வரை, முத­லீட்­டா­ளர்­களுக்கு திரும்ப கொடுக்­கும் மரபை உரு­வாக்கி, கடை­பிடிக்­கின்­ற­ன.
தமி­ழக நிறு­வ­னங்­களில், டி.வி.எஸ்., முரு­கப்பா குழு­மம் போன்­ற­வற்றை, இதற்கு முன்­னோ­டி­யா­கச் சொல்­ல­லாம். மென்­பொ­ருள் நிறு­வ­னங்­க­ளான இன்­போ­சிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்றவையும், இத்­த­கைய சிறந்த மேலாண்மை பண்­பு­களை கடைப்­பி­டிக்­கின்­றன.ஆனால், தொடர்ந்து அதிக டிவி­டெண்ட் கொடுப்­பது, பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் மட்­டுமே என்­ப­தில், சிறி­தும் சந்­தே­கம் இல்லை. பல பன்­னாட்டு நுகர்வு தொழில் நிறு­வ­னங்­கள், லாபத்­தில், 60 – -75 சத­வீ­தம் வரை டிவி­டெண்ட் கொடுத்து வரு­கின்­றன.ஆக, பங்கு முத­லீட்டு லாபம் என்­பது, பங்­கு­களை விற்­றால் மட்­டுமே நம் கைக்கு வரும் என்­கிற சூழல் மாறி, இந்த டிவி­டெண்ட் மூலம் தொடர்ச்­சி­யான வரு­வாய் ஈட்­டு­வ­தா­லும் கிடைக்­கும் என்ற மிகச் சிறந்த வழி நமக்கு கிடைத்­துள்­ளது.
ஆனால், சமீப காலங்­களில், பல நிறு­வ­னங்­கள், டிவி­டெண்ட் கொடுப்­ப­தற்கு பதி­லாக, ‘பைபேக்’ என்ற யுத்­தியை, அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்­றன. இதற்கு முக்­கிய காரணம், புதி­தாக அம­லுக்கு வந்த வரி சட்­டங்­கள். ஒரே நிகர லாபம், முத­லீட்­டா­ளரை சென்று அடை­யும் முன்­, மூன்று முறை வரிக்கு உட்­படுத்­தப்­படும் அவ­லம் தான் இதற்கு முக்கிய காரணம்.
பைபேக் முறை­யில் நமக்கு பல சாத­கங்­கள் உண்டு. முக்­கி­ய­மாக, நிறு­வ­னத்­தின் எதிர்­கா­லத்­தில் அதிக நம்­பிக்கை கொண்­ட­வர்­கள், பங்­கு­களை விற்­கா­மல் இருக்­கும்­போது, ஒவ்­வொரு பைபேக்­கிற்கு பிற­கும், நிறு­வன மொத்த பங்­கில், தங்­கள் பங்­கீடு உயர்­வ­தால் பயன் பெறுவர்.வருங்­கால நிறு­வன வளர்ச்­சி­யில், அவர்­கள் அதிக பயன் அடை­வர். இருந்­தும், பல நிறு­வ­னங்­களில், நிறு­வன முத­லா­ளி­களும், தங்­கள் பங்­கு­களை பைபேக் மூலம் விற்­கும் சூழ­லும் ஏற்­பட்டு விடு­கிறது.
இதற்கு, பல கார­ணங்­கள் உண்டு. தனிப்­பட்ட பணத் தேவை­கள், டிவி­டெண்ட் முறையை விட, பைபேக் முறை­யில் வரி குறைவு, இதர முத­லீட்டு தேவை­கள் போன்­றவை சில முக்­கிய கார­ணங்­கள்.சமீப காலங்­களில், அரசே தன் சொந்த பொதுத் துறை நிறு­வ­னங்­களில், அதி­கம் பைபேக் முறையை கையெடுத்து, தன் பங்­கு­களை பொதுத் துறை நிறு­வ­னத்­திற்கு அதிகம் விற்­றுள்­ளது.
வரி வேற்­று­மை­யை­யும் கடந்து, அர­சின் இந்த முடி­வுக்கு முக்­கி­ய­மான கார­ணம், மத்­திய பட்­ஜெட்­டில் ஏற்­படும் நிதிப் பற்­றாக்­கு­றை­யும், அதை ஈடு செய்ய ஏற்­ப­டுத்­தப்­பட்ட அர­சின் பங்கு விலக்கு இலக்­கு­க­ளுமே.
வரும் காலங்­களில், இந்த முறை இன்­னும் முக்­கி­யத்­து­வம் பெறும் என்­ப­தில், சிறி­தும் சந்­தே­கம் இல்லை. எனவே, இதை எப்­படி கையாண்டு வெற்றி பெறு­வது என்­பதை முத­லீட்­டா­ளர்­கள் கற்­றுக் கொள்ள வேண்­டும்.

-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்-

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)