மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய ... ... பணவீக்கம் 3.8 சதவீதமாக குறைந்தது பணவீக்கம் 3.8 சதவீதமாக குறைந்தது ...
ஜி.எஸ்.டி.: காத்­தி­ருக்­கும் கோரிக்­கை­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
00:19

சமீ­பத்­திய, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில், மூன்று முக்­கிய முடி­வு­கள் எட்­டப்­பட்­டன. படிப்­ப­டி­யாக செய்­யப்­பட்டு வரும் மாற்­றங்­கள், வணி­கர்­களை மகிழ்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளதா?சரக்கு மற்­றும் சேவை வரியை நாடெங்­கும் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தில் இருந்து, தொடர்ச்­சி­யான முன்­னேற்­றங்­கள் ஏற்­பட்டு வரு­கின்­றன.
பல மாநில நிதி அமைச்­சர்­கள் இடம்பெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்டங்­கள், ஒவ்­வொரு முறை­யும் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்ப­டுத்தி வரு­கின்­றன.இங்­கே­யுள்ள சிறு வணிகர்­கள், பெரு வணிகர்கள் என, அனைத்து தரப்­பி­ன­ரும் தெரி­விக்­கும் பல்­வேறு கருத்­து­களை, இந்­தக் கவுன்சில் கவனத்தில் எடுத்­துக் கொள்­கிறது.
அவர்­கள் சந்­திக்­கும் சிரமங்­களும், நடை­முறை சிக்­கல்­களும் புரிந்து கொள்ளப்­படு­கின்றன.அத­னால் தான், ஒவ்­வொரு கவுன்­சில் சந்­திப்­பி­லும், மாறு­தல்­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. தான் பிடித்த முய­லுக்கு மூன்றே கால் என, அரசு கடுமை காட்­டா­மல் இருப்­பதே, மிகப்­பெ­ரிய வளர்ச்சி தான். சந்தை நில­வ­ரங்­களுக்கு ஏற்ப, ஜி.எஸ்.டி., திருத்­தங்­கள் மேற்­கொள்ளப்­படு­கின்­றன.
சென்ற, ஜி.எஸ்.டி., கவுன்­சில் சந்­திப்­பில், பல பொருட்­கள், 28 சதவீத அடுக்­கில் இருந்து, 18 சத­வீத அடுக்­குக்கு நகர்த்­தப்­பட்­டன. 28 சத­வீத அடுக்கே முழு­மை­யாக நீக்கப்­ப­ட­லாம், என்ற பேச்சும் அடி­பட்­டது.

முன்­னேற்­றங்­கள்
தற்­போ­தைய, ஜி.எஸ்.டி., கூட்­டத்­தில், அடுத்த கட்ட முன்­னேற்­றம். 20 லட்­சம் ரூபாய் வரை விற்­று­ மு­தல் செய்து வந்த நிறுவனங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்­பில் இருந்து, விலக்கு அளிக்­கப்­பட்டு வந்­தது; அது, 40 லட்­சம் ரூபா­யாக உயர்த்தப்­பட்­டு உள்­ளது.
ஜி.எஸ்.டி., ‘காம்­போ­சி­ஷன்’ எனும், கூட்டு திட்­டத்தை தேர்வு செய்­வ­ தற்­கான விற்­று­மு­தல் வரம்பு, 1 கோடி ரூபா­யாக இருந்தது. அது, 1.5 கோடி­யாக உயர்த்தப்­பட்­டு உள்­ளது.இவை இரண்­டை­யும் பற்றி, நாம் முன்­னரே இந்தப் பகு­தி­யில் எழு­தி­யி­ருக்­கி­றோம். வரி விதிப்­பில் இருந்து, விலக்கு அளிப்­ப­தற்­கான வரம்பு, 80 லட்­சம் ரூபாய் வரை உயர்த்­தப்­பட வேண்­டும் என்­பதே, சிறு வணி­கர்­களின் கோரிக்கை.வரி விலக்கு வரம்பு, 20 லட்­சத்­தில் இருந்து, 40 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டி­ருப்­பதே துணிச்­ச­லான முடிவு தான்.
அதே­ச­மயம், இத­னால், பெரிய வரு­வாய் இழப்பும் இல்லை. ஜி.எஸ்.டி., செலுத்த பதிவு செய்த­வர்­களில், 50 சத­வீ­தம் பேர், இந்த வரம்பு உயர்­வால் வெளி­யே­ற­லாம்.அவர்­க­ளால், மொத்த, ஜி.எஸ்.டி., வரு­வா­யில், 2,000 – 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்­ப­ட­லாம். இது, மொத்த, ஜி.எஸ்.டி., வசூ­லில், 2 – 3 சத­வீ­தம் மட்டுமே.மேலும், முன்­னாள் தலை­மை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ரான, அர­விந்த் சுப்­ர­ம­ணி­யம், வரி செலுத்­தும் சிறு வணி­கர்­க­ளுக்­கான விற்­று­மு­தல் வரம்பு, 40 லட்­சம் ரூபா­யாக இருக்க வேண்­டும் என்று தெரிவித்தது, இங்கே நினை­வு­ கூ­ரத்­தக்­கது.
நியா­ய­மான அணு­கு­முறை
மிக முக்­கி­ய­மான இன்னொரு முடிவும், ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்டத்­தில் ஏற்றுக் கொள்ளப்­பட்­டு உள்ளது. இயற்­கை பேரி­டர்­க­ளின் போது, ஏற்­படும் பாதிப்­பு­க­ளைச் சமா­ளிக்­க­வும், நிதி ஆதா­ரங்­க­ளை திரட்­ட­வும், ‘பேரி­டர் வரி’ என்ற கூடு­தல் வரியை விதிக்­க­லாம். இதற்கு, ஜி.எஸ்.டி., விதி­மு­றை­க­ளி­லேயே இடம் இருக்­கிறது.
முதன்­மு­றை­யாக, கேரள அரசு, தங்­கள் மாநி­லத்­துக்­குள், அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு, 1 சத­வீ­தம், ‘பேரி­டர் வரி’ விதித்­துக்­கொள்ள அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.பொது­வாக, இந்த வரி நாடெங்­கும் விதிக்­கப்­படுமோ என்ற அச்­சம் இருந்­தது; புகை­யிலை, பான் மசாலா போன்ற, ‘பாவப்­பட்ட பொருட்­க­ளின்’ மீது சுமத்­தப்­ப­டுமோ என்றஎண்­ண­மும் இருந்­தது.
இவை இரண்­டும் இல்லா­மல், எந்த மாநி­லத்­தில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளதோ, அந்த மாநிலம் மட்­டும் தம் வரியை உயர்த்­திக்­கொள்ள அனு­ம­திப்­பது, நியா­ய­மான அணுகு­மு­றை­யாக பார்க்கப்­படு­கிறது.ஜி.எஸ்.டி.,யில் இன்­னும் செய்­யப்­பட வேண்டியவை ஏரா­ளம். ஒவ்­வொரு துறை­யும், தாங்­கள் சந்­திக்­கும் சிர­மங்­களை தெரி­வித்து வரு­கின்­றன.
கூட்­டுத்­திட்­டம்
மிக முக்­கி­ய­மான ஒரு குறை, ஜி.எஸ்.டி., கூட்­டுத் திட்­டத்தை ஏற்­றுக் கொள்­ப­வர்­கள் தெரி­விப்­பது. அதா­வது, கூட்­டுத் திட்­டத்தை ஏற்­றுக் கொள்­ப­வர்­கள், ஆண்­டுக்கு ஒரு முறை கணக்­கு­க­ளைச் சமர்ப்­பித்­தால் போதும்; ஒவ்­வொரு காலாண்­டும், வரி செலுத்­தி­னால் போதும்.இவர்­கள் உற்­பத்தி செய்­யும் பொருட்­க­ளுக்கு, உள்­ளீட்டு வரி­யைப் பெற முடி­யாது. அதே­போல், இவர்­க­ளி­டம் இருந்து பொருட்­க­ளையோ, சேவை­க­ளையோ பெறு­ப­வர்­க­ளால், உள்­ளீட்டு வரி­யைக் கோர­வும் முடி­யாது.
இத­னால், கூட்­டுத் திட்டத்தை ஏற்­ற­வர்­கள் தனித் தீவு போல் ஆகி­விட்­ட­னர். பெரிய நிறு­வ­னங்­கள் அனைத்தும், இத்­த­கைய சிறு நிறு­வ­னங்­க­ளோடு எந்­த­வித வர்த்­த­கப் பரி­வர்த்­த­னை­யும் செய்ய மாட்டோம் என்­கின்­றன.
உள்­ளீட்டு வரி­யைக் கோர முடி­யாது என்­றால், இவர்­க­ளி­டம் இருந்து வாங்­கும் பொருட்­க­ளின் மொத்த செல­வும் அவர்­கள் தலை­மேல் தான். அதா­வது சிறு நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து முழுத் தொகை­யும் கொடுத்து வாங்கி, பெரு நிறு­வ­னங்­கள் தங்­கள் தயா­ரிப்­பு­களை உற்­பத்தி செய்ய வேண்­டும்.
வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் போய் சேரும்­போது, உண்­மை­யில் அப்­பொ­ருட்­கள் இரட்டை வரி விதிப்­பையே சந்­திக்­கின்­றன. இது ஒரு பக்­கம் என்­றால், உள்­ளீட்டு வரி­யைப் பெற முடி­யாத நிறு­வ­னங்­க­ளோடு எதற்­குப் பரி­வர்த்­தனை செய்ய வேண்­டும் என, பெரு நிறு­வ­னங்­கள், அவற்றை விலக்கி வைத்து விடு­கின்­றன.
இது ஒரு இடி என்­றால், தாங்­கள் செய்­யும் உற்­பத்­தி­க­ளுக்கோ, சேவை­க­ளுக்கோ, சிறு நிறு­வ­னங்­க­ளால், உள்­ளீட்டு வரி­யைப் பெற முடி­ய­வில்லை என்பது இன்­னொரு இடி.ஜி.எஸ்.டி., கூட்­டுத் திட்டத்தை ஏற்­கும் நிறு­வ­னங்­கள், உள்­ளீட்டு வரி­யைக் கோர முடி­யாது என்­பது தான் முன்­நி­பந்­தனை. இத­னால், இவர்­களும் முழுத் தொகையை செலுத்­தியே பொருட்­களை வாங்க வேண்­டும்.
ஜி.எஸ்.டி., என்­ப­தன் அடிப்­ப­டையே, ஒவ்­வொரு நிலை­யி­லும் வரி கூடிக் கொண்டே போகக்­கூ­டாது என்­பது தான். ஆனால், கூட்­டுத் திட்­டத்­தில் அந்த அடிப்­படை ஆட்­டம் காண்­கிறது.இன்­னொரு புறம், சிறு வணி­கர்­கள் தான் இந்தி­யா­வில் பெரு­ம­ளவு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­கின்­ற­னர் என்­பது நிதர்­ச­னம். அவர்­கள், பிற உற்­பத்­தி­யா­ளர்களுக்கு சம­மாக நடத்­தப்­பட்­டால் தான், வணி­கத்­தில் நெரு­டல் இல்­லா­மல் இணக்­கம் ஏற்­படும்.வழக்­கம் போல், அடுத்த, ஜி.எஸ்.டி., கூட்டத்­தில், மேலும் பல அடுக்­கு­கள் களை­யப்­படும் என்ற நம்­பிக்­கை­யோடு காத்­தி­ருப்­போம்.
-ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)