பணவீக்கம் 3.8 சதவீதமாக குறைந்ததுபணவீக்கம் 3.8 சதவீதமாக குறைந்தது ...  சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்கள் காணாத சரிவு சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்கள் காணாத சரிவு ...
‘ஓலா’வில் ரூ.150 கோடி சச்சின் பன்சால் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2019
00:24

பெங்களூரு, ஜன. 15–‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, சச்சின் பன்சால், 150 கோடி ரூபாயை, வாடகை கார் சேவை நிறுவனமான, ‘ஓலா’வில் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடு குறித்த விபரம், நிறுவன பதிவாளர் அலுவலக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஓலா நிறுவனத்தின், 70 ஆயிரத்து, 588 முன்னுரிமை பங்குகளை, ஒரு பங்கின் விலை, 21 ஆயிரத்து, 250 ரூபாய் என்ற அளவில் வாங்கியிருக்கிறார், சச்சின் பன்சால்.இந்தியாவின் முன்னணி, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான, பிளிப்கார்ட் நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, அமெரிக்காவின், ‘வால்மார்ட்’ கடந்த ஆண்டு வாங்கியது. பிளிப்கார்டின் சொத்து மதிப்பு, 1 லட்சத்து, 47 ஆயிரம் கோடி ரூபாய். இதில், 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியுள்ளது.எனவே, 1 லட்சத்து, 7,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.இருப்பினும், பிளிப்கார்ட் நிறுவனர்களான, சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும், மிக குறைவான பங்குகளையே பிளிப்கார்ட்டில் வைத்திருந்தனர்.

வால்மார்ட் நிறுவனத்துக்கு பங்குகளை விற்ற வகையில், சச்சின் பன்சாலுக்கு, 1 பில்லியன் டாலர் அதாவது, 7,050 கோடி ரூபாய் கிடைத்ததாக தகவல்கள் வந்தன. இதற்காக அவர், 699 கோடி ரூபாயை முன்பண வரியாக கட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்டிலிருந்து வெளியேறிய சச்சின் பன்சால், பல்வேறு முதலீடுகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது, ஓலா நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)