என்.சி.டி.,-யில் முத­லீடு செய்­யும் ­முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்என்.சி.டி.,-யில் முத­லீடு செய்­யும் ­முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் ... 'யெஸ் பேங்க்'  சி.இ.ஓ., பதவி ரவ்நீத் சிங் கில் பெற  வாய்ப்பு 'யெஸ் பேங்க்' சி.இ.ஓ., பதவி ரவ்நீத் சிங் கில் பெற வாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி சி.இ.ஓ., ஊதியத்திற்கு, ‘கடிவாளம்’:புதிய விதிகளை உருவாக்கும் ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2019
00:47

மும்பை:வங்கி, சி.இ.ஓ., ஊதியம் உள்ளிட்டவை தொடர்பான புதிய விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி உருவாக்கி வருகிறது.இது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:வங்கிகளின் நிதி நிலை அறிக்கை, வாராக் கடன், ஈட்டும் லாபம், நிர்வாக செயல்பாடு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில், சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
இதற்கான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி உருவாக்கி வருகிறது.தற்போது, வங்கி மூத்த அதிகாரிகள் ஊதியம் தொடர்பாக, பொதுவான விதிமுறைகள் தான் உள்ளன.வங்கிகளின் வர்த்தகம், நிர்வாக செயல்பாடு, இடர்ப்பாடு நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில், இயக்குனர் குழு, ஊதியத்தை நிர்ணயிக்கிறது.ரிசர்வ் வங்கி, குறிப்பாக, சி.இ.ஓ.,க்களின் ஊதியம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
ஒரு வங்கியின், சி.இ.ஓ., ஊதியத்திற்கு ஒப்புதல் அளிப்பதும், அவர் சரிவர செயல்படாத பட்சத்தில், சலுகையை திரும்பப் பெறவும், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது.இருந்த போதிலும், சி.இ.ஓ., ஊதியத்திற்கு என, தனி விதிமுறைகளை உருவாக்கும் பட்சத்தில், அவற்றை பின்பற்றி, வங்கி இயக்குனர் குழு, சுலபமாக ஒருவரின் ஊதியத்தை நிர்ணயித்து, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெற முடியும்.பொதுத் துறை வங்கிகள், பெருமளவு வாராக் கடன்களும், அவற்றுக்கு போதுமான தொகையை ஒதுக்க முடியாததால் இழப்பையும் சந்தித்து வருகின்றன. இத்தகைய சூழலில், இவ்வங்கிகளின் இயக்குனர் குழு, சி.இ.ஓ., ஊதியத்தை நிர்ணயம் செய்வதில், அதிக அக்கறையுடன், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.மேலும், வங்கி இயக்குனர் குழு, ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு, தனி இயக்குனர்களின் நிலைப்பாட்டை அறியவும் விரும்புகிறது.
செயல்சாரா இயக்குனர், தனி இயக்குனர் ஆகியோரை கலந்து ஆலோசிக்காமல், வங்கி இயக்குனர் குழு, ஒரு சில முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பதை தடுக்கவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ஒரு வங்கியின் ஆண்டு ஆய்வுப் பணி முடிந்த பின் நடைபெறும் கூட்டத்தில், செயல்சாரா தலைவரும், வங்கி தணிக்கை குழு தலைவரும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இத்தகைய அம்சங்களை உள்ளடக்கியதாக புதிய விதிமுறைகள் இருக்கும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)