பதிவு செய்த நாள்
15 ஜன2019
00:52
புதுடில்லி:‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனர், நரேஷ் கோயல், தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக வெளியான செய்தியால், நேற்று, பங்கு வர்த்தகத்தின் இடையே, அந்நிறுவன பங்கின் விலை, 18 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.கடும் நிதி நெருக்கியில் சிக்கியுள்ள, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், நரேஷ் கோயல் வசம், 51 சதவீத பங்கு உள்ளது. இந்நிறுவனத்தை, கடன் பிரச்னையில் இருந்து மீட்கும் நோக்கில், நரேஷ் கோயல், தன் பங்கு மூலதனத்தை, 20 – 25 சதவீதமாக குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக, தனியார், ‘டிவி’ ஒன்று செய்தி வெளியிட்டது.
மேலும், அவர், தன் ஓட்டுரிமை வரம்பை, 10 சதவீதமாக குறைத்து, ஜெட் ஏர்வேசில், ‘எதியாட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின். 24 சதவீத பங்கை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாகவும், செய்தி வெளியானது.இதனால், ஜெட் ஏர்வேஸ் கடன் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்பதால், நேற்று, அதன் பங்கு விலை கிடுகிடுவென உயர்ந்தது.மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில், ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை, 40.90 ரூபாய் அதிகரித்து, 294.40 ரூபாயில் நிலை கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|