பதிவு செய்த நாள்
16 ஜன2019
00:00
புதுடில்லி:இந்திய சந்தையில், இந்தாண்டு, பன்முக பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில், 20 புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன.
மகிந்திராவின், 'எக்ஸ்.யு.வி 300', ஹூண்டாயின், இன்னும் பெயரிடாத, 'க்யு.எக்ஸ்.ஐ.,' என்ற குறியீட்டைக் கொண்ட, துவக்க நிலை கார் முதல், ஆடி, பி.எம்.டபிள்யு., நிறுவனங்களின் ஆடம்பர கார் வரை, சந்தையை கலக்க வருகின்றன.
கியா
தென்கொரியாவின் ஹூண்டாய் குழுமத்தைச் சேர்ந்த, கியா நிறுவனம், புதிய காருடன், இந்தியாவில் கால் பதிக்க உள்ளது.அதுபோல, சீனாவின், எஸ்.ஏ.ஐ.சி., குழும நிறுவனமான, எம்.ஜி.மோட்டார்ஸ், புதிய காரை அறிமுகப்படுத்த உள்ளது.கியா நிறுவனம், 9 லட்சம் ரூபாய் விலையில், துவக்க நிலை காரை அறிமுகப்படுத்தும் என, தெரிகிறது.
இதே விலையில், மகிந்திராவின், 'எக்ஸ்.யு.வி.,300' மற்றும் நிசான் நிறுவனத்தின் கார்கள் சந்தைக்கு வர உள்ளன. நிசான், வரும் வாரத்தில், 'கிக்ஸ்' என்ற காரை, சந்தைப்படுத்த உள்ளது.
ஹூண்டாய், அதன் புதிய கார் விலையை, 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனம், 'கோனா' என்ற மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை, 20 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, தெரிகிறது.
ஆடி
எம்.ஜி., மோட்டார்ஸ் நிறுவனம், பன்முக பயன்பாட்டு வாகனப் பிரிவில், 'ஹெக்டர்' என்ற, நடுத்தர வகை கார் விற்பனையை, ஜூன் மாதம் துவக்க உள்ளது. இதன் விலை, 15 லட்சம் ரூபாய்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடம்பர கார் பிரிவில், பி.எம்.டபிள்யு., நிறுவனம், 60 லட்சம் ரூபாய் விலையில் 'எக்ஸ்4' சொகுசு காரை அறிமுகம் செய்ய உள்ளது.ஆடி நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் ஆடம்பரமான 'இட்ரான்' காரை, 1.30 கோடி ரூபாய் விலையில் விற்பனைக்கு விட, திட்டமிட்டுள்ளது.
இத்துடன், ஹூண்டாயின் 'கோனா', ஜாகுவார் நிறுவனத்தின 'ஐ–பேஸ்' மின்சார கார்களும், இந்திய சந்தையை கலக்க வருகின்றன.கார் சந்தையில் போட்டி கடுமையாக உள்ளதால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, அதிக அளவில், பன்முக பயன்பாட்டு வாகனங்கள் அறிமுகமாக உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|