பதிவு செய்த நாள்
16 ஜன2019
00:03
மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த, 'யெஸ் பேங்க்' -ன், சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, டாய்ட்ச்சு வங்கியின் ரவ்நீத் சிங் கில் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'யெஸ் பேங்க்' தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் பதவிக் காலம், இம்மாதத்துடன் முடிகிறது. அவருக்கு மேலும் மூன்றாண்டுகள் பதவி நீட்டிப்பு தர, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
இதையடுத்து, தேர்வுக் குழு, யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, டாய்ட்ச்சு வங்கியின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி, ரவ்நீத் சிங் கில் மற்றும் யெஸ் வங்கியின் நிதிச் சந்தை பிரிவு தலைவர், ரஜத் மோங்கா ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
அதில், டாய்ட்சு வங்கியின் சி.இ.ஓ., ஆக, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவத்துடன், வெளிவங்கியைச் சேர்ந்தவர் என்பதால், ரவ்நீத் சிங் கில், யெஸ் பேங்க் சி.இ.ஓ., ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
யெஸ் வங்கியின் புதிய சி.இ.ஓ., குறித்த அறிவிப்பு,ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|