பதிவு செய்த நாள்
22 ஜன2019
10:50
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் ஆரம்பமாகி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜன., 22) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.05 புள்ளிகள் சரிந்து 36,444.91-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 45.90 புள்ளிகள் சரிந்து 10,915.95-ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் மந்தமான சூழல், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு மற்றும் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேறியதாலும் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.
ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த நிலையில் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.71.23ஆக வர்த்தகமானது. தொடர்ந்து காலை 10.45 மணியளவில் 3 காசுகள் சரிந்து ரூ.71.30ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|