பதிவு செய்த நாள்
22 ஜன2019
23:29
புதுடில்லி : டொயோட்டா மோட்டார் நிறுவனமும், பானாசோனிக் நிறுவனமும் இணைந்து, மின் வாகனங்களுக்கான பிரிஸ்மேட்டிக் பேட்டரிகளை தயாரிக்க, ஒப்பந்தம் செய்துள்ளன. நேற்று டொயோட்டா நிறுவனம் இதை அறிவித்துள்ளது.
மின்வாகனங்களுக்கான சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத பேட்டரியை, அடுத்த ஆண்டு முதல், இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக தயாரிக்க இருக்கின்றன.இந்த கூட்டுத் தொழிலில், டொயோட்டா நிறுவனத்தின் பங்கு, 51 சதவீதமாக இருக்கும். மீதி, 49 சதவீதம் பானாசோனிக், மஸ்டா, சுபரு ஆகிய நிறுவனங்கள் வசம் இருக்கும்.
டொயோட்டா நிறுவனம், 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு, 10 லட்சம் பேட்டரிகள் விற்பனை என்ற இலக்கை வைத்து உள்ளது. இதற்கு இந்த ஒப்பந்தம் பெருமளவுக்கு உதவிகரமாக இருக்கும்.மேலும் இந்த கூட்டின் மூலம், சீன நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியும்.
பானாசோனிக் நிறுவனத்தை பொறுத்தவரை, அதன் பிற வாடிக்கையாளர்களான, ஹோண்டா, போர்டு மோட்டார் ஆகிய நிறுவனங்களுக்கு பேட்டரிகளை எப்படி வழங்கும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும் அமெரிக்காவில், டெஸ்லா நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது, பானாசோனிக் நிறுவனம்.
தற்சமயம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தயாரிப்பில் முன்னணியில் பானாசோனிக் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|