வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ...  கவர்ச்சியான முதலீட்டு சந்தை: பிரிட்டனை விஞ்சியது இந்தியா கவர்ச்சியான முதலீட்டு சந்தை: பிரிட்டனை விஞ்சியது இந்தியா ...
குறு, சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு பாக்கி? பொருட்களை கொள்முதல் செய்தோர் பதிலளிக்க, ‘கெடு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
23:45

புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் பெற்ற பொருட்களுக்கு தர வேண்டிய நிலுவை எவ்வளவு என்பதை, கொள்முதல் நிறுவனங்கள் தெரிவிக்கும் திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை, நிறுவனங்கள், அரசு துறைகள் ஆகியவை, 45 நாட்களில் வழங்க வேண்டும்.எனினும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில், பணம் கிடைப்பதில்லை என்ற புகார் அதிகரித்துள்ளது.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்க நடவடிக்கைகளால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்நிலையில், சப்ளை செய்த பொருட்களுக்கான பணம் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்குமேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 45 நாட்கள் கடந்தும் பணம் தராமல் உள்ள நிறுவனங்கள், அரசு துறைகள் ஆகியவை, அது பற்றி, ‘கெடு’ முடிந்த, 30 நாட்களுக்குள், நிறுவனங்கள், பதிவாளர் அலுவலகத்தில் தெரியப்படுத்தும் நடைமுறை அமலாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்த அரசாணை பிறப்பிக்கப்படும்.

இதனால், குறித்த காலத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும். பணம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கவும் இத்திட்டம் உதவும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி நெருக்கடி மற்றும் நடைமுறை மூலதனத் தேவைகளை சமாளிக்க, இத்திட்டம் துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று மடங்கு:
பொருட்களை சப்ளை செய்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 45 நாட்கள் தாண்டியும், பணம் தராத கொள்முதல் நிறுவனங்கள் மீது, புகார் தெரிவிக்க, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில், வர்த்தக வசதி சேவைப் பிரிவு உள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வட்டியை விட, மூன்று மடங்கு அதிக வட்டியுடன், நிலுவையை வசூலிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)