பதிவு செய்த நாள்
23 ஜன2019
23:32
புதுடில்லி : ‘இந்தியாவில், தண்ணீர் பிரச்னையால், வங்கி களின் வாராக் கடன் உயரும்’ என, உலக வனவிலங்கு நிதியம் எச்சரித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இந்தியாவில், தண்ணீர் பற்றாக்குறையால், அதை சார்ந்த துறைகள் பாதிக்கப்படும். குறிப்பாக, மின்சாரம் மற்றும் வேளாண் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு, தண்ணீர் பிரச்னையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம், இத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளின் கடன் நிலுவையில் எதிரொலிக்கும்.
இந்திய வங்கிகளின் மொத்த கடனில், குறிப்பிடத்தக்க அளவிற்கு தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ளும் துறைகளின் பங்கு, 40 சதவீதமாக உள்ளது. வங்கிகள் ஏற்கனவே வாராக் கடன் சிக்கலில் உள்ளன. இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் நிறுவனங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், 10 சதவீத கடன் திரும்ப வராமல் போக வாய்ப்புள்ளது.
‘இந்தியா, இதுவரை இல்லாத வகையில் தண்ணீர் பிரச்னையை சந்தித்துள்ளது’ என, ‘நிடி ஆயோக்’ தெரிவித்துள்ளது. அதனால், நீர் வள ஆதாரத்தை பெருக்கவும், தண்ணீர் பிரச்னைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|