பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:12

ஐதராபாத் : ரத்தன் டாடாவின் கனவு வாகனம் என்ற சிறப்புடன், அறிமுகப்படுத்தப்பட்ட, ‘நானோ’ கார் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.
இது குறித்து, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் பயணியர் வாகன பிரிவு தலைவர், மயாங்க் பரீக் கூறியதாவது:குஜராத்தின், சனாந்த் தொழிற்சாலையில், ‘நானோ’ கார்கள் தயாராகி வந்தன. இந்நிலையில், இந்தாண்டு முதல், புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரலில், வாகன துறையில் மேலும் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன.
அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ மாசு கட்டுப்பாடு விதிமுறை அமலுக்கு வர உள்ளது.அதனால், நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். சில மாடல்களின் மேம்பாட்டிற்கு முதலீடு செய்யும் திட்டம், நிறுவனத்திடம் இல்லை; அத்தகைய மாடல்களில், நானோ காரும் ஒன்று.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2009ல், 1 லட்சம் ரூபாய் விலையில், நானோ கார் அறிமுகமானது. இந்த காருக்கு, துவக்கத்தில் இருந்த வரவேற்பு, சில ஆண்டுகளில் குறையத் துவங்கியது. இதனால், உற்பத்தியும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2020, ஏப்., 1 முதல், நானோ கார் தயாரிப்பு, விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|