முந்திரி விலை குறைவு விவசாயிகள் கவலை முந்திரி விலை குறைவு விவசாயிகள் கவலை ... ‘டிவி, ஏசி’க்கு சுங்க வரியை உயர்த்துங்க! மின்னணு சாதன தயாரிப்பாளர்கள் கோரிக்கை ‘டிவி, ஏசி’க்கு சுங்க வரியை உயர்த்துங்க! மின்னணு சாதன தயாரிப்பாளர்கள் ... ...
பன்னாட்டு ஜவுளி கண்காட்சி கோவையில் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2019
23:15

சென்னை : கோவை, கொடிசியா வர்த்தக மையத்தில், பன்னாட்டு ஜவுளி கண்காட்சி, நாளை துவங்குகிறது.

தமிழக அரசு சார்பில், கோவை கொடிசியா வர்த்தக மையத்தில், நாளை முதல், 29ம் தேதி வரை, மூன்று நாட்கள், பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடக்க உள்ளது.இக்கண்காட்சியில், 9,000 சதுர மீட்டர் பரப்பளவில், 400 அரங்குகளில், நுாற்பு, நெசவு, பின்னலாடை, ஆயத்த ஆடை, பட்டு, காதி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட, ஜவுளித் தொழிலின் அனைத்து பிரிவுகளிலும், ஜவுளி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

அவர்களின் தயாரிப்புகளான, நுால் முதல், துணி ரகங்கள் வரை, அனைத்து ஜவுளிகளும், காட்சிப்படுத்தப்பட உள்ளன. ஜவுளித் தொழிலின் சிறப்பம்சங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.கண்காட்சியுடன், மத்திய அரசின் அமைப்புகள் சார்பில், ‘இன்ட் டெக்ஸ்போ – 2019’ என்ற தலைப்பில், வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடக்க உள்ளது.

கண்காட்சி துவக்க விழா, நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. கண்காட்சியை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி துவக்கி வைக்க உள்ளார். தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, கைத்தறித்துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன், துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர், பங்கேற்க உள்ளனர்.கைத்தறித்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், பன்னாட்டு ஜவுளி கண்காட்சி குறித்து, விளக்க உரையாற்ற உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)