‘டிவி, ஏசி’க்கு சுங்க வரியை உயர்த்துங்க! மின்னணு சாதன தயாரிப்பாளர்கள் கோரிக்கை‘டிவி, ஏசி’க்கு சுங்க வரியை உயர்த்துங்க! மின்னணு சாதன தயாரிப்பாளர்கள் ... ...  ‘மாருதி சுசூகி’ லாபம் ரூ.1,489 கோடியாக குறைந்தது; பங்கு விலையும், 8 சதவீதம் சரிவடைந்தது ‘மாருதி சுசூகி’ லாபம் ரூ.1,489 கோடியாக குறைந்தது; பங்கு விலையும், 8 சதவீதம் ... ...
அமெரிக்க விஸ்கிக்கு அதிக வரி; இந்தியா மீது டிரம்ப் காட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2019
23:18

வாஷிங்டன் : ‘‘அமெரிக்க விஸ்கிக்கு, இந்தியா அதிக வரி விதிக்கிறது,’’ என, அந்நாட்டு அதிபர், டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாடுகள் விதிக்கும் சுங்க வரிக்கு நிகரான வரி விதிக்கும் மசோதா குறித்து, எம்.பி.,க்கள் கூட்டத்தில், டிரம்ப் பேசியதாவது:‘ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்’ மீதான, 100 சதவீத சுங்க வரியை குறைக்க வேண்டும் என, 2 நிமிடம் தான் பேசினேன். இந்தியா அதை, 50 சதவீதமாக குறைத்தது. இருந்தும், வெளிநாட்டு மோட்டார் சைக்கிளுக்கு, அமெரிக்கா, 2.4 சதவீதம் தான் வரி விதிக்கிறது. அமெரிக்க விஸ்கி இறக்குமதிக்கு, இந்தியா, 150 சதவீதம் வரி வசூலிக்கிறது. ஆனால், நாம் அவ்வாறு வரி விதிக்கவில்லை. இந்தியா, நியாயமற்ற முறையில் அதிக வரி விதிக்கிறது.

முன்னேறும் நாடுகள், வர்த்தகப் பாதுகாப்பு என்ற அரண் அமைத்து, நம் வேளாண் மற்றும் பிற பொருட்களின் விற்பனைக்கும் தடையாக உள்ளன. அவர்கள், நம்மை நல்லவர்கள் அல்லது அதி புத்திசாலிகள் அல்ல என்ற நினைப்பில் பல ஆண்டுகளாக இதை செய்து வருகின்றனர். இதற்கு, நாம் முடிவு காண வேண்டும். அவர்களில் பலர் நமக்கு நண்பர்கள்; கூட்டாளிகள்.

எனினும், அவர்கள், நம் கூட்டணியில் இல்லாத பிற நாடுகளை விட, நம்மிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கின்றனர். இந்த சட்டம் மூலம், இனி ஒரு நாடு விதிக்கும் அதே வரியை, அமெரிக்காவும் விதிக்க வழி ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)