பதிவு செய்த நாள்
28 ஜன2019
07:28
சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயர்ந்து வரும் வாடகை விகிதம், வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச்செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
வாடகை வீடு தகவல் வழங்கும், ‘நோ புரோக்கர் டாட் காம்’ இணையதளம், சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஐந்து நகரங்களில் வாடகைக்கு குடியிருப்போர் மத்தியில் நடத்திய ஆய்வில், வாடகை விகிதம் உயர்ந்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் அதிகபட்சமாக, 18 சதவீதம் வாடகை சராசரியாக உயர்ந்துள்ளது. சென்னையில், 15, பெங்களூரில், 14 சதவீதம் உயர்ந்துஉள்ளது. மேலும், இந்த இரு நகரங்களிலும், முன் வைப்புத் தொகை அதிகம் கேட்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
வாடகை விகிதம் அதிகரித்து இருந்தாலும், பலரும், இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளை நாடுகின்றனர். 2017ம் ஆண்டில் ஒரு படுக்கையறை கொண்ட, வீடுகள் அதிகம் நாடப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|