பதிவு செய்த நாள்
30 ஜன2019
23:53
புதுடில்லி : மத்திய அரசு, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும், புதிய அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதுவரை, சில்லரை வர்த்தகம், வணிகர் நலன் உள்ளிட்டவற்றை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கவனித்து வந்தது.
இந்நிலையில், ‘சில்லரை வர்த்தகத்திற்கு தேசிய கொள்கையை உருவாக்கி, தனி அமைச்சகத்தின் கீழ், உள்நாட்டு வணிகத்தை கொண்டு வர வேண்டும்’ என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, சமீபத்தில், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியது. இதை ஏற்று, மத்திய அரசு, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் பெயரை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை என, மாற்றியுள்ளது.
இத்துறை இனி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவன விவகாரங்கள்; சுலபமான வர்த்தகத்திற்கு உரிய வசதிகளை ஏற்படுத்துவது; சில்லரை விற்பனை உட்பட, உள்நாட்டு வணிக வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், சில்லரை வியாபாரிகள் மற்றும் அவர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபடும்.பெயர் மாற்றம் மற்றும் புதிய அமைப்பின் கீழ், உள்நாட்டு வர்த்தக விவகாரங்களை கொண்டு வரும் அரசாணைக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|