பதிவு செய்த நாள்
31 ஜன2019
10:39
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அமெரிக்க பெடரல் வங்கி அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்றுமதியாளர்களும், வர்த்தகர்களும் அமெரிக்க டாலரை அதிகம் விற்றதாலும், இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கியது, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் உள்ளதாலும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுடன் காணப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜன.,31, காலை 9.15 மணி நிலவரம்) இந்திய ரூபாய் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து 70.86 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 71.12 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|