பதிவு செய்த நாள்
31 ஜன2019
11:07
மும்பை : நேற்றைய (ஜன.,30) வர்த்தக நேர இறுதியில் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜன.,31, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 213.32 புள்ளிகள் உயர்ந்து 35,804.57 புள்ளிகளாகவும், நிப்டி 53.95 புள்ளிகள் உயர்ந்து 10,705.75 புள்ளிகளாகவும் இருந்தன. ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.20 சதவீதம் உயர்வுடன் காணப்பட்டன.
அதே சமயம் பஜாஜ் பைனான்ஸ், யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி, எச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.59 சதவீதம் சரிவுடன் காணப்பட்டன. ஆசிய பங்குச்சந்தைகளை பொருத்தவரை ஹாங்காங், ஹங்காய், ஜப்பான் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|