பதிவு செய்த நாள்
01 பிப்2019
23:40
உலகிலேயே மிக வேகமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும், 27 கி.மீ., நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன.
டில்லியில் வாகன நெரிசலைக் குறைக்க, கிழக்கு புறவழி விரைவு சாலை, அசாமில், போகிபீல் பாலம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.‘பிரதமர் கிராம சாலை திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில், சாலை வசதி மும்மடங்கு பெருகியுள்ளது. 17.84 லட்சம் குடியிருப்பு பகுதிகளில், 15.8 லட்சம் பகுதிகளுக்கு, இணைப்பு சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
துறைமுகங்களை மேம்படுத்தும், ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், முதன் முறையாக, கோல்கட்டா – வாரணாசி இடையே நதிநீர் சரக்குபோக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இது, வட கிழக்கு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.குறைந்த கட்டணத்தில், சிறிய நகரங்களுக்கும் விமான சேவை வழங்கும், ‘உதான்’ திட்டத்தின் கீழ், 100 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
இதனால், உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, இரு மடங்கு உயரும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.ரயில்வேயில், ‘பிராட்கேஜ்’ பிரிவில், ஆளில்லா கடவுப் பாதைகள் அறவே அகற்றப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|