பதிவு செய்த நாள்
01 பிப்2019
23:45
நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வாயிலான வசூல், மாதம், சராசரியாக, 97 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டில், 89 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக இருந்தது.ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில், மாநிலங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட, 14 சதவீத ஆண்டு வரி வருவாயில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தொழில் துவங்குவதை சுலபமாக்கியுள்ளதால், ஜி.எஸ்.டி., செலுத்துவோர் அதிகரித்துள்ளனர். வரி வருவாயும் உயர்ந்துள்ளது.
கணக்கு தாக்கல் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான, ‘இ – வே பில்’ நடைமுறை முழுவதும், மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது.வர்த்தகர்களின் நலன் காக்க எடுத்த நடவடிக்கைகளால், சிறிய வியாபாரிகள், தயாரிப்பாளர்கள், சேவை வழங்குவோர் உட்பட, 35 லட்சம் பேர் பயனடைவர்.
நுகர்வோருக்கு மிச்சம்
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., பூஜ்யமாகவோ அல்லது, 5 சதவீதமாகவோ குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோருக்கு, ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.வீடு வாங்குவோரின், ஜி.எஸ்.டி., சுமையை குறைக்க, அமைச்சர்கள் குழுவை நியமிக்குமாறு, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|