பதிவு செய்த நாள்
01 பிப்2019
23:48
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு, வலைதளத்தில் விண்ணப்பித்த, 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு ஒப்புதல் அளிக்கும் திட்டம் அமலில் உள்ளது.
மத்திய அரசு துறைகள் வெளிப்படையாக பொருட்கள் வாங்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைதள சந்தை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வரம்பு, 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில், குறைந்தபட்சம், 3 சதவீத பொருட்கள், பெண் தொழில்முனைவோரிடம் இருந்து பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், உள்நாட்டு சில்லரை வர்த்தகத்தை மேம்படுத்தவும், வியாபாரிகள் நலனுக்காக வும், தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையை உருவாக்கியுள்ளதாக, பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக சலுகை
மத்திய இடைக்கால பட்ஜெட்டில், பெண்கள் நடத்தும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வருவாய்க்கு, 3 சதவீத வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பெண்கள், தொழில் துறையில் ஆர்வத்துடன் களமிறங்க ஊக்குவிக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|