பதிவு செய்த நாள்
01 பிப்2019
23:53
இறக்குமதி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும், மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. விரைவான சரக்கு ஏற்றுமதிக்கு மின்னணு, ‘டேக்‘ தொழில்நுட்பத்தை சுங்கத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனால், வணிகர்களுக்கு, சரக்கு போக்குவரத்து செலவும், நேரமும் மிச்சமாகியுள்ளது.
கடந்த, 2011--- – 12 முதல், 30 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவிலேயே நீடித்த, ஏற்றுமதி மதிப்பு, 2017- – 18ல், 30 ஆயிரத்து, 300 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் – டிசம்பர் வரை, 24 ஆயிரத்து, 544 கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தையொட்டி, சுங்க வரிகள் மற்றும் நடைமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில், 36 சாதனங்களுக்கான சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.வரியின்றி, உபகரணங்களை இறக்குமதி செய்து, முழுமையான சாதனங்களாக ஏற்றுமதி செய்யவும், ஒற்றைச் சாளர அங்கீகார நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|